பெருங்குளம் பேரூராட்சியை கழகம் கைப்பற்றியது – தலைவராக புவனேஸ்வரி சண்முகநாதன் தேர்வு

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் பேரூராட்சியை கழகம் கைப்பற்றியது. தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் வெற்றிபெற்றார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்குளம் பேரூராட்சியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக வார்டுகளில் கழகம் வெற்றிபெற்றது. இதையடுத்து நேற்று நடைபெற்ற மறைமுக தேர்தலின் போது கழகத்தை சேர்ந்த கவுன்சிலர் டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன். தலைவராக வெற்றி பெற்றார். அவருக்கு கழக நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
தலைவர் பதவிக்கு வெற்றிபெற்ற டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் கூறுகையில், பெருங்குளம் பேரூராட்சியில் கழகம் வெற்றியை தடுக்கும் நோக்கத்தில் தி.மு.க.வினர் பொய் பிரச்சாரம் செய்தனர். அதை எல்லாம் நம்பாமல் கழகத்திற்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்து என்னை வெற்றிபெற வைத்த பெருங்குளம் பேரூராட்சியில் உள்ள அனைத்து மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து பெருங்குளம் பேரூராட்சியின் வளர்ச்சிக்காக இரவு பகல் பாராது நான் பாடுபடுவேன் என்றார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், தூத்துக்குடி மாநகர 59-வது வார்டு கழக கவுன்சிலர் எஸ்.பி.எஸ்.ராஜா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே.பிரபாகர், மாவட்ட முன்னாள் வர்த்தக அணி செயலாளர் திருமணவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.