உக்ரைனில் தவித்த தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்பு – பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் நன்றி

சென்னை
உக்ரைனில் தவித்த தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மருத்துவம் மற்றும் உயர்கல்வி பயில உக்ரைன் சென்ற அனைத்து மாணவர்களையும் குறிப்பாக தமிழக மாணவ செல்வங்களை கடும் போர் சூழலில் இருந்து அவர்களை பாதுகாப்பாக மீட்டு தாயகம் அழைத்து வந்த பாரத பிரதமருக்கும், வெளியுறவுத் துறை அமைச்சருக்கும், தமிழக மாணவர்கள் சார்பாகவும், எனது சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.