பெரம்பலூர் உணவகத்தில் அம்மா படம் அகற்றம் – கழக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு

பெரம்பலூர்,
பெரம்பலூரில் உள்ள அம்மா உணவகத்தில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படம் அகற்றப்பட்டதற்கு கழக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விடியா தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தது முதல் கழக அரசின் சாதனை திட்டங்களை முடக்கி வருகிறது. குறிப்பாக அம்மா உணவகத்திற்கு கருணாநிதி பெயரை வைக்க முயற்சி மேற்கொண்டது. இதற்கு கழகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் அம்மா உணவகங்களில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்தை தி.மு.க. அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமைனையில் உள்ள அம்மா உணவகங்களில் முன்னாள் முதலைமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்தை நீக்கி விட்டு அரசு முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மா உணவகத்தில் ஊதா நிறத்தில் புதிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் உள்ள அம்மா உணவகங்களில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படம் அகற்றப்பட்டதற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அம்மா அவர்களின் திருவுருவப் படத்தை மீண்டும் உணவகங்களில் வைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.