சிறப்பு செய்திகள்

தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர வேண்டும் – அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த திட்டம் என்பதால் முடக்கக்கூடாது. தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர வேண்டும் என்று அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி உள்ளார்.

முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணியிடம் நேற்று செய்தியாளர்கள் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டுவருகிறதே? உங்கள் வீட்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ரெய்டு நடத்தப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

தாலிக்கு தங்கம் திட்டம் அற்புதமான திட்டம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த அற்புதமான திட்டம். ஏழை குடிசையில் இருக்கக்கூடிய சாதாரண பெண்கள்கூட இன்றைக்கு தாலிக்குத் தங்கம் அணியக்கூடிய வாய்ப்பை பெற்றுள்ளார்கள். அனைத்து தரப்பினரும் வரவேற்கக்கூடிய திட்டம்.

மற்ற மாநிலங்கள்கூட பின்பற்றக்கூடிய திட்டம். அம்மா கொண்டு வந்த திட்டம் என்பதால் முடக்குகிறார்கள். இதைத்தான் நாங்கள் கேட்டோம். தொடர வேண்டும் என்று கேட்டோம். பொதுமக்களும், கழகத்தினரும் அரசின் முடிவை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

என் வீட்டில் மட்டுமல்ல முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடைபெற்றது. என் வீட்டில் இரண்டாவது முறை ரெய்டு

நடைபெற்றது. அம்மாவின் மறைவுக்கு பின்னால் இந்த ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கும்போது நல்ல முறையில் ஆட்சியை கொண்டு சென்றோம். இதன் காரணமாக முக்கிய நிர்வாகிகள் வீட்டில் ரெய்டு செய்கிறார்கள்.

பல்வேறு ஊடகங்கள் பல்வேறு தகவல்களை போட்டிருந்தார்கள். எதுவும் கைப்பற்றப்படவில்லை. இரண்டாவது முறை வரும்போது எதுவும் கைப்பற்றவில்லை. இந்த அரசை எதிர்க்கின்ற, இன்னும்கூட
எங்களுக்கு கிடைத்த செய்தி, இதுபோன்று இப்போது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார் அல்லவா.அவர் மீது வழக்கு போடுவது என்ற நிலையை அவர்கள் எடுத்துள்ளார்கள்.

என் மீது ஏதாவது ஒரு வழக்கு போட்டு கைது செய்து உள்ளே வைக்க வேண்டும் என்ற பெரிய முயற்சியில் காவல்துறை ஈடுப்பட்டுள்ளார்கள்.

வெளிப்படையாகவே இதனை எல்லோரும் சொல்கிறார்கள். இதுபோல எதிர்த்து பேசக்கூடிய முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் வந்து விட்டார்கள். ரெய்டு செய்துள்ளார்கள். எதிர்க்கட்சியை முடக்கக்கூடிய செயலில் மட்டும்தான் இந்த அரசு ஈடுப்பட்டு வருகிறது.

550 அறிவிப்புகள் தந்தார்கள். மக்கள் எதிர்பார்த்த திட்டங்களை நிறைவேற்றவில்லை. எதிர்க்கட்சியை முடக்க வேண்டும் என்ற திட்டம் மட்டும்தான் அவர்களிடம் உள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எங்களை உருவாக்கியுள்ளார்கள்.

கட்சியை புரட்சித்தலைவர் உருவாக்கியுள்ளார். எந்த
சூழ்நிலை வந்தாலும் மக்களுக்காக நாங்கள் எதையும் தாங்கிக்கொண்டு போராடுவோம். அந்த திட்டங்களை செய்ய வைப்பதற்கு முனைப்பாக இருப்போம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கூறினார்.