சிறப்பு செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி குறித்து தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது என்ன? பேரவையில் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

சென்னை,

நகைக்கடன் தள்ளுபடி குறித்து தேர்தல் அறிக்கையில் நீங்கள் குறிப்பிட்டது என்ன என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார்

தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2022-23-ம் ஆண்டிற்காக நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண்மைத்து நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கழக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கட்டுமான பொருட்களின் விலையை குறைப்பதாக சொன்னீர்கள். ஆனால், விலை குறையவில்லை. கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழே நகைக் கடன் பெற்ற அனைவரின் கடனையும் ரத்து செய்வதாக சொன்னீர்கள்

என்று பேசியபோது,நிதி அமைச்சர் குறுக்கிட்டு சில விளங்கங்களை அளித்தார்.

தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி சில புள்ளி விபரங்களை தெரிவித்து விட்டு தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு கடைசி வரை நகைக்கடன்

தள்ளுபடி வழங்க தயாராக உள்ளோம். தூங்குபவர்களை எழுப்ப முடியும். ஆனால், தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று பேசினார். இதற்கு கழக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழே நகைக்கடன் பெற்றவர்களின் கடன்தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்து என்றார்.

இதற்கு முதல்வர் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சில கருத்துக்களை தெரிவித்தார். அப்போது பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை தான், நான் சுட்டிக் காட்டினேன். முறைகேடு

நடந்ததை நாங்கள் ஆதரிக்கவில்லை. தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொன்னீர்கள்? என்றார். தொடந்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, விதிகளை மீறி கடந்த ஆட்சி காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தபோது கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கழக உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தனது பேச்சை முடித்து கொள்ள வேண்டும் என்று பேரவை

தலைவர் தெரிவித்தார். இதற்கு கழக உறுப்பினர்கள் குறைந்த அளவு நேரமே பேச அனுமதிக்கப்பட்டுள்ளது என்று பேரவை தலைவரிடம் தெரிவித்தனர். அப்போது அவை முன்னவர் துரைமுருகன் கடந்த ஆட்சியில் நாங்கள் பேசும்போதும் குறுக்கீடு செய்யாத வகையில் பேச வேண்டும் என்று நீங்கள் சொன்னீர்களே என்று தெரிவித்தார்.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அவை குறிப்பை எடுத்து பாருங்கள். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு தான் அதிக நேரம் பேச வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.