தற்போதைய செய்திகள்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி

சென்னை

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? எஎன்று பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ேகள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2022-23-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீது முன்னாள் அமைச்சரும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

நிதி மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சரால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2022-2023-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, தமிழ்நாட்டு மக்களின் நலன்களை காக்கும் அறிக்கையாகவோ, மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிக்கையாகவோ, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அறிக்கையாகவோ இல்லை. இந்தநிதிநிலை அறிக்கை மக்களை ஏமாற்றி விட்டது. மக்களை வஞ்சித்து விட்டது.

தி.மு.கவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளான பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும்முறை, கல்வி கட்டணம் ரத்து, அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், அரசு துறைகள் மற்றும் கல்வி நிலையங்களில் 3.5 லட்சம் காலியிடங்களை நிரப்புதல், ஒவ்வோரு ஆண்டும் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்குதல்,

70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு போக்குவரத்து பேருந்துகளில் இலவச பயண வசதி,கட்டுமான பொருட்களான சிமெண்ட், கம்பி, செங்கல், மணல், மரம் போன்ற பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கொண்டு வந்த நியாயமான விலையில் விற்பனை, ராஜீவ்காந்தி வழக்கில் 7 பேரின் விடுதலை,
ஜல்லிகட்டு காளை வளர்ப்போருக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் ஊக்கத்தொகை, சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து ஊழியர்களை அரசு ஊழியர்கள் ஆக்குதல்,

35 வயதிற்கு மேற்பட்ட திருமணம் ஆகாத ஆதரவற்ற மகளிருக்கு அரசு வேலைவாய்ப்பு, நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் ரத்து
குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டம் பெற்றவருக்கு அரசு வேலைவாய்ப்பு, பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்தல், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை வேளையில் பால்வழங்கும் திட்டம், கச்சத்தீவை மீட்டெடுத்தல்,

சேதுசமுத்திர திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற நடவடிக்கை, நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2500 ரூபாய், கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை பெற்றுத் தருவது என எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

நிதிநிலை அறிக்கையில் பொதுப்பணிதுறை நிதி ஒதுக்கீடு குறித்த விபரங்கள் இடம் பெறவில்லை. மதுவிலக்கு குறித்தும் எந்த தகவலும் இல்லை. போக்குவரத்து கழகம் போன்ற நிறுவனங்களின் நிதிநிலமையை சீரமைக்க இதுவரை நடவடிக்கை எடுப்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை.

தி.மு.க.வின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான, தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத்தலைவிகக்கும் மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டமாகும். இதனை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதைபெற தகுதி உடையவர்கள் யார் யார் என்பதை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும், நிதிநிலையில் முன்னேற்றம்
ற்படும்போது, இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

இதிலிருந்து, குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம் என்பது இப்போதைக்கு செயல்படுத்தப்படாது என்பது தெளிவாகிறது.

சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் முதியோர் உதவிதொகைக்கு 4 ஆயிரத்து 816 கோடி ரூபாயினை ஒதுக்கி இருக்கும் தமிழ்நாடு அரசு தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியான முதியோர் உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்பதால், சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்த நிதிநிலை அறிக்கை இலக்கற்றும், எதிர்காலம் குறித்த எந்த தீர்க்கமான பார்வையும் இல்லாமல் இருக்கிறது. மக்கள் நலனுக்கு இந்த நிதிநிலை அறிக்கை வெறும் பூஜ்ஜியமாக உள்ளது. ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை தரத்தில் முன்னேற்றம் ஏற்படுதற்கு இந்த வரவு செலவு திட்டம் எந்த வகையிலும் பயன்படாது.

மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கையில் சொற்களில் மட்டுமே சொர்க்கத்தை காட்டப்பட்டுள்ளது. வார்த்தைகளுக்கு வர்ணஜாலம் சப்பட்டுள்ளது.

வேளாண்மை பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்களின் ஊதியம், ஓய்வுபெறும் காலநிர்ணயம் ஆகியவற்றை இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் பரிந்துரை செய்கிறது. அதன்படி இந்தியாவில் உள்ள 69 வேளாண்மை பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்களின் ஓய்வு வயது 62 ஆக உள்ளது.

ஆனால் தமிழ்நாடு, கேரளா, இமாச்சலபிரதேச வேளாண்மை பல்கலைகழகங்களில் பணியாற்றி வரும் பேராசிரியர்களின் வயது வரம்பு 60 ஆக உள்ளது. இவர்களுக்கும் மற்ற பல்கலைக்கழகங்களில் உள்ளது போல் வயது வரம்பை 62 ஆக உயர்த்த வேண்டும் என இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் பரிந்துரை செய்துள்ளது.

தற்போது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் 15 உறுப்புகல்லூரிகள், 38 ஆராய்ச்சி நிலையங்கள், 16 வேளாண் அறிவியல் மையங்களில் பணியாற்றி வரும் 950 பேராசிரியர்களுக்கு வயது வரம்பை 60-ல் இருந்து 62-ஆக உயர்த்த, அரசு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ் கிருஷ்ணமூர்த்தி பேசினார்.