மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெறவேண்டும்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

சென்னை
ஏழை எளிய மக்களை மேலும் வாட்டி வதைக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து, அதனை நிறைவேற்றாமல், அதற்கு மாறாக, சொத்து வரியை உயர்த்திய சில மாதங்களிலேயே, ஏழை எளிய மக்களை மேலும் வாட்டி வதைக்கும் வகையில், மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.
விடியா திமுக அரசு தற்போது அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். தேர்தலின் போது அளித்த, “மாதமொரு முறை மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும்” என்ற வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
இவ்வாறு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.