தற்போதைய செய்திகள்

நாகப்பட்டினம், திருவாரூரில் 5 ஆறுகளின் 2-ம் கட்டபணிகள் எப்போது தொடங்கும்? பேரவையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி

சென்னை

நாகப்பட்டிணம், திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆறுகளின் இரண்டாம் பணிகள் எப்போது தொடங்கும் என்று பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் ஒ.எஸ்.மணியன்
கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது முன்னாள் அமைச்சரும், கழக சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் நாகப்பட்டினம் மாவட்டத்திலேயும் திருவாரூர் மாவட்டத்திலேயும் ஐந்து ஆறுகள் வளவனாறு, அடப்பாறு, அரிச்சந்திரனார் ஆறு,

வெள்ளை ஆறு, பாண்டவர் ஆறு. இந்த ஐந்து ஆறுகள் கிட்டத்தட்ட 650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முற்கட்ட பணிகள் நடந்திருக்கிறது. அதை பொதுப்பணித் துறை அமைச்சரை ஒருமுறை நேரில் பார்வையிட வாருங்கள் என்றுஅழைத்தேன். வருவார் என்று பார்க்கிறேன்.

இரண்டாவது கட்டப்பணிகள் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் அரசு நிதியுதவியுடன் நடைபெறுகிற இந்த இரண்டாவது கட்டப்பணி எப்போது தொடங்கும் என்பதை அறிய விரும்புகிறேன் என்று பேசினார்.

இதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் வளவனாறு, அடப்பாறு, அரிச்சந்திரனார் ஆறு, வெள்ளியாறு, பாண்டவர் ஆறு எல்லா நதியிகளிலும் தடுப்பணி கட்டிருக்கிறோம். மீதி இருக்கிற ஆறுகளில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்போது அந்த ஏறக்குறைய ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கத்தை அரசு அனுமதித்து விட்டது. எனவே, நடப்பாண்டில் அந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு பதில் அளித்தார்