தற்போதைய செய்திகள்

தாலிங்க தங்கம் திட்டம் ரத்து,நிதி அமைச்சர் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை,

தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நிதி அமைச்சர் அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

ெசன்னை தலைமை செயலகத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.விடம்

செய்தியாளர்கள் தாலிக்கு தங்கம் திட்டம் குறித்து முதல்வரும், நிதிஅமைச்சரும் அளித்த பதில் உங்களுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளதா என்று கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

எத்தனையோ திருமணங்கள் மஞ்சள் கயிறோடு நடைபெற்றுள்ளது. இதைபோக்க வேண்டும் என்பதற்காக இனிமேல் தங்கம் இல்லாமல் திருமணம் நடைபெறக்கூடாது என்பதற்காகதான் இந்தியாவிலேயே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் எண்பதற்காத்தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இதைத்தான் எங்கள் கொறடா பேரவையில் தெரிவித்தார்.

அம்மா அவர்கள் பெண் கல்வியை ஊக்குவிப்பதோடும், திருமண உதவித்தொகை அளித்து பாதுகாக்கதான் இந்த திட்டத்தை கொண்டு வந்தார். இனிமேல் தங்கம் இல்லாமல் திருமணம் நடக்கக்கூடாது என்ற சமுதாய புரட்சியாக இதனை ஏற்படுத்தியவர் அம்மா அவர்கள்.

அம்மா கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக குளறுபடியை நிதி அமைச்சர் எடுத்து சொல்கிறார். இதனை சீர்செய்ய வேண்டியது அரசின் கடமை. திட்டத்தின் நோக்கம் சமுதாய புரட்சியை ஏற்படுத்துவதுதான். எனவே அவருடைய விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கமாக இல்லை.

முதல்வரே தெரிவித்துள்ளார் 48 வழக்குகள் போடப்பட்டுள்ளது என்று. எத்தனை வழக்கு என்பது முக்கியமல்ல. இந்த திட்டத்தின் நோக்கத்தை பார்க்க வேண்டும்.

அவர்கள் கல்விக்காக கொண்டுவந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை என்று கொறடா தெரிவித்துள்ளார். தங்கத்தை பார்க்காமலே பிறந்து வளர்ந்து இறக்கக்கூடிய நிலை இன்றைக்கு தமிழகத்தில் இருக்கிறது.

அம்மா அவர்கள் திருமணத்தின் போது குண்டுமணி தங்கமாவது இருக்க வேண்டும் என்பதற்காக தாலியை 4 கிராமில் செய்ய முடியாது என்பதால் 8 கிராமமாக உயர்த்தி அறிவித்தார்.

நெல்கொள்முதல் செய்வதில் இருந்த சிக்கலை கொறடா தெரிவித்தார். ஆனால் அதனை அவர்கள் காதில் வாங்கியதாக தெரியவில்லை. 10 லட்சம் நிலுவையில் இருந்தாலும் தகுதி உள்ளவர்களுக்கு நாங்கள் வழங்க சொல்கிறோமே தவிர வேறு ஒன்றும் இல்லை. 3 லட்சம் நிலுவையில் இருக்கின்றது என்றால் இது அரசின் இயலாமையே தவிர திட்டத்தின் இயலாமை இல்லை என்பதுதான் நிதர்ச்சமான உண்மை.

கேள்வி:- தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறதே? முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ரெய்டு நடத்தப்பட்டுள்ளதே? பதில்:- , கொறடா எங்கள் இயக்கத்தை காப்பாற்றுவதிலே, அம்மா அரசை கொண்டு செல்வதிலே அவர் செய்த பணியை நாடு நன்கறியும். கொங்கு மண்டலம் மட்டுமல்ல. தமிழகம் அறியும்.

ஆகவே இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த நடவடிக்கையை எடுக்கிறார்கள். இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். கழக தொண்டர்களை அவர்கள் தொட்டு பார்க்க பார்க்க தான் வேகமாக ஓடி கழக பணி செய்வார்கள். இது பழிவாங்கம் நடவடிக்கை.

இது அம்மாகாலத்திலிருந்தே தொடர்கிறது. இன்றைக்கு இருவருக்கு தான் வாய்ப்பு அளிக்கிறார்கள். துணை கேள்விக்கு வாய்ப்பு தருவதில்லை. வாய்ப்பு அளித்தால் தான் உண்மையை தெரிவிக்க முடியும். சட்டமன்றம் என்பது ஜனநாயக மன்றம். இரண்டு பக்கமும் குரல் ஒலித்தால் தான் அது உண்மையான ஜனநாயகமாக இருக்கும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.