உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. முறைகேடு: நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம்

சென்னை
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. முறைகேடு செய்து வெற்றி பெற்றதுள்ளது. இதனை எதிர்த்து கழகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். சட்டப்பேரவையில் நேற்று வெளிநடப்பு செய்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது”-
கேள்வி:- முதலமைச்சர் பேசும்போது தி.மு.க.வின் தேர்தல் 510 தேர்தல் வாக்குறுதிகளில் 208 வாக்குறுதிகள் 8 மாதத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாரே?
பதில்:- இதற்கு அவர் தான் வெள்ளை அறிக்கை தர வேண்டும். 208 என்னென்ன விளக்க வேண்டும். சின்ன சின்ன பிரச்சினைக்கு எல்லாம் ஒரு அறிவிப்பு. அப்படி பார்த்தால் கழக ஆட்சியில் எண்ணற்ற அறிவிப்புகள். சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்த அறிவிப்புகள் மட்டுமல்ல.
புரட்சித்தலைவருக்கு நூற்றாண்டு விழா நடத்தினோம். அதில் நிறைய திட்டங்களை நாங்கள் அறிவித்தோம். அதனையும் நிறைவேற்றி தந்தோம். அம்மா அவர்கள் காவல்துறை மற்றும் ஆட்சியர்களின் மாநாட்டை நடத்துவார். அப்போது அவர்கள் குறிப்பிடும் பிரச்சினைகள் குறித்து அரசாணை வெளியிட்டு,
நிறைவேற்றிய அரசு அம்மாவின் அரசு.
10 ஆண்டு காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்கள். இதனை எல்லாம் நாங்கள் செய்துள்ளோம். இதனை எல்லாம் மறைத்து விட்டார். இதனை எல்லாம் அவர் கொண்டு வரவில்லை. 10 ஆண்டு காலத்தில் இதுவரை எந்த ஒரு அரசும் செய்ய முடியாத, அறிவிக்காத திட்டங்களை எல்லாம் அறிவித்து, கழக அரசு சாதனை படைத்தது. கழக அரசு மக்களுக்கு ஒரு பொற்கால அரசாக இருந்தது. அது ஒரு பொற்காலம்.
நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஒரு மயையை ஏற்படுத்துகிறார்கள். எல்லாவற்றிலும் நாங்கள் தான் வெற்றி பெற்றோம் என்று தெரிவிக்கிறார்கள். எப்படி வெற்றி பெற்றார்கள். ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ஆயிரக்கணக்கில் அளித்தார்கள். தங்கக் காசு, வெள்ளிக் காசு, கொலுசு, ஹாட் பாக்ஸ் கொடுத்தார்கள். .அராஜகம் செய்தார்கள். மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் நேராக சென்று வாக்களித்து விட்டு சென்றது போல பேசுகிறார்கள்.
சென்னையில் மட்டும் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கக்கூடிய 5 மணியிலிருந்து 6 மணி வரை கள்ள ஓட்டு போடுவார்களை பயன்படுத்தி 6 சதவீதம் வரை கள்ள ஒட்டு போட்டுள்ளார்கள்.
கோவை மாவட்டம் முழுவதும் 157 பேர்தான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் சுமார் 85 ஆயிரம் வாக்குகள் 5 மணியிலிருந்து 6 மணிவரை பதிவாகியுள்ளது. இப்படி கள்ள ஓட்டுகளை போட்டு, முறைகேடாக வெற்றி பெற்றுள்ளார்கள். தில்லுமுல்லு செய்து தான் வெற்றி பெற்றுள்ளார்கள்.
2011-ல் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருக்கும்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது மாநகராட்சி அனைத்திலும் கழகம்
வெற்றி பெற்றது. அதில் வாக்கு சதவீதம் 71.34. அப்போது தி.மு.க. பெற்ற வாக்கு சதவீதம் 15.85. இப்போது நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. 12 கட்சிகளுடன் கூட்டணி சேர்த்து பெற்ற வாக்கு சதவீதம் 43.59. நகராட்சியை பொறுத்தவரை 2011-ல் கழகம் பெற்ற வாக்கு நகராட்சியில் 45.66 சதவீதம். மாநகராட்சியில்
24 சதவீதம்.
எந்த கூட்டணியும் இல்லாமல் தன்னந்தனியாக நின்று 24 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். தி.மு.க. 12 கட்சி கூட்டணியுடன் கள்ள
ஓட்டு போட்டும், தில்லுமுல்லு செய்தும், முறைகேடு செய்தும் பெற்ற வாக்கு சதவீதம் 43.59. கழகம் வலிமையாக தான் இருக்கிறது. 2011-ம் ஆண்டு 45.66 சதவீதம், 2022-ல் 26.86 சதவீத வாக்குகளை கழகம் தனித்து நின்று பெற்றுள்ளது. தி.மு.க. 2011-ம் ஆண்டு நகராட்சியில் 26.08 சதவீதமும், 2022-ம் ஆண்டில் 12 கட்சி கூட்டணியுடன் 43.49 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
பேரூராட்சியை பொறுத்தவரையில் 2011-ம் ஆண்டு கழகம் 35.28 சதவீதம் மற்றும் 2022-ம் ஆண்டு 25.56 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. தி.மு.க. 2011-ம் ஆண்டு 22.09 சதவீதமும், 2022-ம் ஆண்டு 41.91 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. கழகத்தை பொறுத்தவரையில் அதிக வாக்குகளை பெற்றுள்ளோம்.
உள்ளாட்சி தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகும்.
ஆனால் இந்த முறை மிக மிக குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது. 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது சென்னை மாநகராட்சியில் 59.50 சதவீத வாக்குகள் பதிவானது. இப்போது 42 சதவீத வாக்குகள் தான் பதிவாகியுள்ளது. 17.50
சதவீத வாக்குகள் குறைந்துள்ளது. இது ஏன் குறைந்தது என்றால் இந்த 10 மாத கால ஆட்சி மீது கோபம், எரிச்சல். இதனால் மக்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை செய்யவில்லை.
கேள்வி:- கொரோனா தொற்று உள்ளவர்கள் வாக்களிக்கும் நேரத்தில் அதிக அளவு வாக்குப்பதிவு ஆனது என்று குறிப்பிடுகிறீர்கள். இது தொடர்பாக அ.தி.மு.க. நீதிமன்றத்தில் வழக்கு ஏதாவது தொடர இருக்கிறதா?
பதில்:- இது குறித்த புள்ளி விபரத்தை எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அப்போது தான் இந்த வழக்கிற்கு வலு சேர்க்கும். எனவே இது தொடர்பாக பணியை செய்து வருகிறோம்.