தற்போதைய செய்திகள்

ஆட்சியில் இல்லாவிட்டாலும் கழகம் மக்கள் பணி செய்யும் – முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் உறுதி

திண்டுக்கல்

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கழகம் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நரசிங்கபுரத்தில் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு சர்பத், மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு, திராட்சை, அண்ணாச்சி பழகம் ஆகியவற்றை வழங்கி பேசியதாவது:-

கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகளால் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.

கழகம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும் பொதுமக்களுக்கு சேவையாற்றுவதில் எப்பொழுதும் முனைப்புடன் செயல்படும். கோடைகாலம் முழுவதும் இந்த நீர் மோர் பந்தல் செயல்பட்டு பொது மக்களின் தாகம் தணிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.