தி.மு.க அரசு செய்யும் பலனை விரைவில் அறுவடை செய்யும்

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்
சென்னை
அரசு விளம்பரங்களில் புரட்சித்தலைவர் அடைமொழியை நீக்கி எம்.ஜி.ஆரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தி.மு.க. அரசு செய்யும் பலனை விரைவில் அறுவடை செய்யும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில்
கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை சென்ட்ரல் மத்திய சதுக்கத் திட்டத்தின் கீழ் அழகுபடுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் மற்றும் சுரங்க நடைபாதை திறப்பு விழா” விளம்பரத்தில், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் “புரட்சித்தலைவர்” என்ற அடைமொழி மக்களின் ஏகோபித்த உணர்வுகளால் சூட்டப்பட்டது.
கடந்த கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தி வந்த தி.மு.க. அரசு, தற்போது ஒரு படி மேலே சென்று, பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இவ்வாறான செயல்களை தொடர்ந்து இந்த அரசு செய்யுமேயானால், அதற்கான பலனை தி.மு.க.
விரைவில் அறுவடை செய்யும்.
மக்களால் சூட்டப்பட்ட புரட்சித் தலைவர் என்ற அடைமொழியை, அரசு விளம்பரங்களில் மீண்டும் சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.