தற்போதைய செய்திகள்

வெளிநாடு பயணம் குறித்து ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா?

மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் கேள்வி

சென்னை,
வெளிநாடு பயணம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? என்று வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை பெரம்பூர் தொகுதி கொடுங்கையூர் 34-வது வட்டத்திற்குட்பட்ட கட்டபொம்மன் தெருவில் பகுதி அம்மா பேரவை இணை செயலாளர் ஜம்புலி வி.பாலாஜி, கவிதா ஆகியோரது ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், பழச்சாறு, இளநீர், தர்பூசணி, உள்ளிட்ட குளிர் பானங்கள் ஆகியவற்றை வழங்கினார். மேலும் 500 பெண்களுக்கு சேலைகளையும் அவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், பேசியதாவது:-

ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி கழகத்தின் மக்கள் பணி தொடரும்.கழக ஆட்சியில் முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி இருந்த போது அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து தந்து தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தார். ஆனால் இப்போது ஸ்டாலின் அரசு தொழில் முதலீடு பெற வெளிநாட்டுக்கு சென்று வந்ததை வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா?

ஏற்கனவே பத்து மாத தி.மு.க. ஆட்சியில் விலைவாசி கடும் உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இதனைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் உச்சத்தை எட்டியுள்ள சொத்து வரி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை இம்மியளவும் நிறைவேற்றவில்லை. மக்களின் மனநிலையை எண்ணி ஸ்டாலின் செயல்படாததால் தி.மு.க. அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட தயாராகி விட்டனர்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் வியாசை எம்.இளங்கோவன், என்.எம்.பாஸ்கரன், சிறுபான்மையினர் பிரிவு மாநில துணை செயலாளர் எம்.ஏ.சேவியர், வட்ட செயலாளர்கள் எம்.இளங்கோவன், வி.கோபிநாத், வி.பொன்முடி, லயன் ஜி.குமார், ஹரிகிருஷ்ணன், ராஜேந்திரன், சியான் செந்தில்குமார், ஆ.வேல்முருகன், ஏ.ஆனந்த், டி.கனகராஜ், மற்றும் ஜெஸ்டின் பிரேம்குமார், ஏ.ஆனந்தன், எம்.கே.எஸ்.கலையரசன், எல்.எஸ்.மகேஷ்குமார், சி.டி.சிவா, சேட்டு மற்றும் பகுதி, வட்ட, சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.