தமிழகம்

மாலைமுரசு தொலைக்காட்சி நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நோட்டீஸ்

சென்னை

அபாண்டமாக வீண் பழி சுமத்திய மாலைமுரசு டி.வி. நிர்வாகத்தினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது குறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

30.3.2022 அன்று மாலை முரசு தொலைக்காட்சியில் முரசரங்கம் நிகழ்ச்சியில் நெறியாளர் செந்தில்வேல் என்பவர்,
நான் தமிழக முதல்வராக இருந்தபோது தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன், அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்ற போது எனது மகனையும், உறவினர்களையும் அழைத்து சென்றதாகவும், கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்ய சென்றதாகவும் உண்மைக்கு மாறாக, அபாண்டமாக வீண் பழி சுமத்தினார்.

எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்த அந்த நெறியாளர், மாலைமுரசு தொலைக்காட்சி நிர்வாகத்தினர் 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று வழக்கறிஞர்
நோட்டீஸ் அனுப்பி உள்ளேன்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.