தற்போதைய செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்

சேலம்

சேலம் மாவட்டம், எடப்பாடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களுக்கு எடப்பாடியார் நிவாரண உதவிகளை வழங்கி வழங்கினார்.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே சரபங்கா நதியின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களின் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து 50க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் தாவாந்தெரு அரசு துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அம்மா உணவகத்தில் இருந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எடப்பாடி நகர கழகம் சார்பில், கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், எடப்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான எடப்பாடி கே.பழனிசாமி அரிசி, பருப்பு, காய்கறிகள், புடவை ரூ.2000 உதவித்தொகை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி நகர கழக செயலாளர் முருகன், ஒன்றிய கழக செயலாளர்கள் மாதேஸ், துரை (எ) மாதேஸ், ஒன்றிய குழு தலைவர் கரட்டூர் மணி, நகர் மன்ற முன்னாள் தலைவர் கதிரேசன், நகரமன்ற உறுப்பினர்கள், வார்டு கழக செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உள்ளனர்.