தற்போதைய செய்திகள் மற்றவை

அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்

பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

ெசன்னை

கழக அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால் முடக்காமல் அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.

சட்டசபையில் நேற்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித் றை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

அம்மா அவர்களின் அரசில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் ஆட்சியில் உருவாக்கப்பட்ட 142.65 கோடி மனித சக்தி நாட்களுக்கு, 28923.70 கோடி ஊதியம் வழங்கப்பட்டது. 7.11.2016 முதல், தேசிய மின்னனு நிதி மேலாண்மை மூலம், நேரடியாக மத்திய அரசால் வங்கி கணக்கில், வரவு

வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கும், குறித்த காலத்தில் ஊதியம் வழங்கியதற்கு எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின்அரசு தேசிய விருது பெற்று தமிழகத்திற்கு புகழ் சேர்த்துள்ளது.

தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில், மனித உழைப்பு நாட்களை 100-லிருந்து, 150ஆக உயர்த்தவும், நாளொன்றுக்கு ஊதியம், 273 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக, உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால், இந்த அரசு பதவியேற்று, ஓராண்டு நெருங்கிய நிலையிலும், இதுவரை மனித உழைப்பு நாட்கள் 150ஆகவும், ஊதியம் ரூபாய் 300ஆகவும் உயர்த்தி வழங்கப்படவில்லை.

அம்மா அவர்களால் பணிக்கு செல்லும் மகளிர்களின் தினசரி செயல்பாடுகளுக்கு உதவிடும் வகையில், அவர்களின் பணியிடங்களுக்கு பல்வேறு பணிசுமைகளுக்குகிடையே, எளிதாக சென்று சேருவதற்கு, ஏதுவாக இரு சக்கர வாகனங்களும், மாற்று திறனாளிகளுக்கு, மூன்று சக்கர வாகனங்களும், மானிய விலையில் வாங்குவதற்காக, மாநில அரசின் சொந்த நிதியில், தொடங்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டம், 2017–- 2018-ம் ஆண்டு முதல், நடைமுறைப்படுத்தப்பட்டது.

அன்றைய முதல்வர் எடப்பாடியார் தலைமையில் பாரத பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், வாகனம் வாங்க, அதிகபட்ச மானியமாக, வாகன விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25,000 இதில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படுகிறது.
இதுவரை, இத்திட்டத்தின் மூலம், 3 லட்சத்து 9 ஆயிரத்து 30 உழைக்கும் பயன்பெற்றுள்ளனர்.

இத்திட்டம், பணிக்கு செல்லும் மகளிர்களிடம், மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள திட்டமாகும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அம்மாவின் அரசு கொண்டு வந்த திட்டம், என்பதற்காக இத்திட்டத்தை முடக்காமல் மகளிர்கள் நலன் கருதி, இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமென, இப்பேரவை

வாயிலாக மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேசினார்.