தமிழுக்காக தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சாடல்

சென்னை
தமிழுக்காக தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு கழக ஒருங்கிணைப்பாளளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந் நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத்தர வெள்ளையனை எதிர்த்து வீரமுடன் போரிட்ட தீரன் சின்னமலையின் புகழை போற்றும் வகையில் அவரது சிலையை முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நிறுவி திறந்து வைத்தார். சாதி மாதத்திற்கு அப்பற்பாட்டவர் தீரன் சின்னமலை. அப்படிப்பட்ட மாவீரனுக்கு கழகத்தின் சார்பில் புகழ் மாலை சூட்டப்பட்டது.
தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது இதுவே முதல் முறை. இனி வரும் காலங்களில் இது தொடரும். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல ஆளுகின்ற அரசாக இருந்து கொண்டு தேநீர் விருந்தை தி.மு.க. புறக்கணித்திருப்பது தமிழக மக்களின் நெஞ்சில் ஈட்டி பாய்ந்து அளிக்கும் வேதனை போல உள்ளது.
தமிழ் காக்கப்பட வேண்டும், போற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் நிச்சயமாக இதில் கலந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு தொய்வு ஏற்பட்டால் தான் தமிழ் என்ற ஆயுதைத்தை கையெலிடுப்பார்கள். தமிழுக்காக அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நாங்கள் பங்கேற்றோம்.
நீட் தேர்வை ரத்து செய்யும் சூட்சுமம் எங்களுக்கு தெரியும். ஆட்சிக்கு வந்தவுடன் கையெழுத்திடுவோம் என சொன்னீர்களே அது என்னவாயிற்று? 15 வருடம் ஆட்சியில் இருந்தும் ஏன் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது வந்துள்ள சிந்தனை அப்போது ஏன் வரவில்லை.
மாநிலத்தின் உரிமையை மத்திய அரசு நிலைநாட்ட தவறினால் அதனை எதிர்த்து நாங்கள் போரிடுவோம். பதவி எங்களுக்கு கர்சீப் போன்றது. மாநிலத்தின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.