தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மரியாதை – முன்னாள் அமைச்சர்கள்- கழக நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் 17.4.2022 அன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று தலைமை கழகம் அறிவித்திருந்தது.
அதன்படி கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை சென்னை கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் திருஉருவ சிலைக்கும், சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப் படத்திற்கும் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், தலைமை கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், மாவட்ட கழக செயலாளர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் கலந்து கொண்டு தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தினர்.
இதேபோல் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்திருக்கும் தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கும், அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவ படத்திற்கும் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி எம்.எல்.ஏ., ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ., ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம்,
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வி.பி.சிவசுப்பிரமணி, கழக அம்மா பேரவை இணை செயலாளர் எஸ்.ஜெயக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, ச.பாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.ரமணீதரன், முன்னாள் எம்.பி.க்கள் செல்வகுமார சின்னையன், சத்தியபாமா, மாவட்ட அவைத்தலைவர் பி.சி.ராமசாமி, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம்,
ஒன்றிய கழக செயலாளர்கள் கதிர்வேல், அருள் ஜோதி செல்வராஜ், கலைமணி, ரஞ்சித் ராஜ், விஜயன், சக்திவேல், தனசேகர், முனியப்பன், ஜெகதீஷ், மேகநாதன், வழக்கறிஞர் துரை சக்திவேல், விவேகானந்தர், சிவகிரி பி.டி.ராமலிங்கம், கொடுமுடி பி.பரமசிவம், கவுதம்,
ஒட்டப்பாறை ஊராட்சி தலைவர் சுமதி தங்கவேல், யூனியன் சேர்மன் கணபதி உட்பட கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் கலந்து கொண்டு தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.
முன்னதாக கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம் சங்ககிரி மலைக்கோட்டையில் உள்ள நினைவுத்தூண் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி எம்.எல்.ஏ., கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செ.செம்மலை, கழக மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தரராஜன், ராஜமுத்து, மணி, பாலசுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜா உட்பட கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் கலந்து கொண்டு தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தினர்.