தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை துவங்க வேண்டும்

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
சென்னை
தமிழ்த்தாய் வாழ்த்துடன் பேரவை துவங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
இதே பேரவையில் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்ற திருப்பெயரை நமது மாநிலத்திற்கு சூட்டி பெருமைப்படுத்தினார். ஆகவே இந்த சட்டமன்றத்தில் நமது சட்டமன்றம் தொடங்குவதற்கு முன்னாலே திருக்குறள்
ஒன்றை சொல்லி சட்டமன்றத்தை தொடங்குகிறோம்.
என்னுடைய அவாவாக விருப்பமாக, தமிழ்த்தாய் வாழ்த்து சொல்லி சபை துவங்கலாமா என்பது குறித்து
நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.