கழகம் சார்பில் 27-ந்தேதி இப்தார் விருந்து – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு

சென்னை
கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஒப்புதலோடு தலைமை கழகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் இவ்வாண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்,
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வருகின்ற 27.4.2002 (புதன்கிழமை) அன்று மாலை 5.30 மணியளவில் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் இப்தார் விருந்து வழங்க உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் இ்ஸ்லாமிய சமுதாய பெருமக்கள், தோழமை கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.