சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ‘மாஸ்க்’ தேவை இல்லையா?

பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி
சென்னை
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாஸ்க் தேவையில்லையா? என்று பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மாஸ்க் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது.
சட்டமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மாஸ்க்
அணியவில்லை. இந்த அறிவிப்பு சட்டமன்ற உறுப்பினர்களை தவிர்த்து பொதுமக்களுக்கு மட்டும் தானா என்பதை அறிய விரும்புகிறேன்.
இவ்வாறு எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். அதனைத்தொடர்ந்து பேரவை தலைவர், எல்லோரும் முககவசத்துடன்தான் வந்தார்கள். பேசும்போது
கழற்றி விட்டார்கள். கண்டிப்பாக எல்லோரும் முகக்கவசம் அணியவேண்டும் என்று தெரிவித்தார்.