கிட்டங்கிகளுக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும்

பேரவையில் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ வலியுறுத்தல்
சென்னை
திருப்பரங்குன்றம் தொகுதி தோப்பூர், ஆஸ்டின் பட்டி, மேலக்குயில்குடி பகுதியில் கிட்டங்கிகளுக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும் என்று பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா வலியுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கழக சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசியதாவது:-
திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூர், ஆஸ்டின்பட்டி, வேலக்குயில்குடி கிராமங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நெல் களஞ்சியங்களின் இருப்பிடமான கிட்டங்கிகள் 40-க்கும் மேற்பட்ட ஏக்கரில் திறந்தவெளி கிடங்காக இருக்கிறது.
சுமார் 2 லட்சம் டன் நெல் நீண்ட நெடிய நாட்களாக அதே இருப்பிடத்திலேயே திறந்தவெளியில் இருக்கிறது. அந்த மூன்று இடங்களிலும், குறிப்பாக பதம் கெடுவதற்கான சூழ்நிலை. வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆகவே, தோப்பூர், ஆஸ்டின்பட்டி, மேலக்குயில்குடி ஆகிய இருப்பிடங்களில், கிட்டங்கி இருக்கிற இடங்களில் நிரந்தர கட்டடம் கட்டி, அதற்கான பாதுகாப்பு வசதினை செய்து தரப்படுமா?
இவ்வாறு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ பேசினார்.