தற்போதைய செய்திகள்

மின்வெட்டுக்கு அரசின் நிர்வாக கோளாறே காரணம்

சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றச்சாட்டு

சென்னை

காற்றாலை மின்சாரம் கூடுதலாக கிடைத்தும் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுவதற்கு அரசின் நிர்வாக கோளாறே காரணம் என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றம்சாட்டி பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி பேசியதாவது:-

இன்றைய தினம் விசைத்தறிகள் நூல் விலை ஏற்றத்தின் காரணமாகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் (தி.மு.க.) தேர்தல் அறிக்கையில் 750 யூனிட்டுக்கு, ஆயிரம் யூனிட்டாக ஆக உயர்த்தி தருவதாக சொல்லியிருக்கின்றீர்கள். அதை உடனடியாக கொடுத்தால் சரியாக இருக்கும். நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

அதுபோல ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டத்தை உள்ளடக்கிய மேட்டூர் இடதுகரை, வலதுகரை வாய்க்கால் எப்போதுமே தண்ணீர் நூறு அடிக்கு மேல் இருக்கிறபோது. மேட்டூர் இடதுகரை, வலதுகரை வாய்க்கால் மூன்று மாவட்டத்திற்கும் கோடை காலமாக, வெயில் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் குடிதண்ணீருக்காகவும், கால்நடைகளுக்காகவும், தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

இன்றைய தினம் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டிருக்கின்றது. அதற்கான காரணத்தை அமைச்சர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த போது இரண்டு முறை சொல்லியிருக்கின்றார். ஒன்று மத்திய அரசு போதிய நிலக்கரியை வழங்கவில்லை என்று சொல்லியிருக்கின்றார். இன்னொன்று 796 மெகாவாட் மின்சாரம் மத்திய அரசு நமக்கு தரவில்லை என்று சொல்லியிருக்கின்றார்.

ஆனால், இந்த 10 ஆண்டு காலத்தில், கொள்கை விளக்கக்குறிப்பில், 84-ம் பக்கத்தில் பார்க்கின்ற போது, 10 ஆண்டு காலத்தை காட்டிலும், இன்றைய தினம் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். 70 சதவிகிதம் நிலக்கரி.

எங்களுக்கு ஒரு கோடியே பத்து லட்சம் டன் வழங்கியது. இன்றைய தினம் ஒரு கோடியே எழுபத்து இரண்டு லட்சம் டன் வழங்கியிருக்கின்றார்கள் என்று சொன்னால், எதிர்க்கட்சி என்று கூட பார்க்காமல் மத்திய அரசு மக்களுடைய தேவைகளை அறிந்து, அந்த அளவிற்கு வழங்கியிருக்கிறது என்று சொன்னால், எப்படி மின் தட்டுப்பாடு ஏற்பட்டது என்பது ஒன்று.

இரண்டாவதாக 796 மெகாவாட் மின்சாரம் தரவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், பக்கம் 65-ல் பார்க்கின்ற போது, மற்ற மாநிலங்களுடைய பங்குகள் 694 மெகாவாட் இங்கே நமக்கு கிடைத்திருக்கிறது என்று சொல்லியிருக்கின்றார்கள். அதேபோல, அமைச்சர் ஒவ்வொரு முறையும் பேசுகின்ற போது, உங்கள் ஆட்சிக்காலத்தில் அனல் மின் நிலையத்தை குறைவாக ஓட்டினீர்கள்.

நாங்கள் இப்போது 30 சதவிகிதத்திற்கு மேல் ஓட்டுகிறோம் என்று சொல்கிறார்கள். 30 சதவிகிதத்திற்கு மேல் என்று சொன்னால், கிட்டத்தட்ட 4,320 மெகாவாட்டில் 1200 மெகாவாட் வர வேண்டும். 1000 மெகாவாட் என்றாலும் கூட 1000 மெகாவாட் கூடுதலாக உற்பத்தியாகின்றது.

எப்போதுமே காற்றாலை மின்சாரம் என்பது மே மாதம் தான் வரும். ஆனால், இப்போதே 1000 மெகாவாட் கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 2900 மெகாவாட் அதிகமாக கிடைத்தும், தமிழகத்திலே மின்வெட்டு நிலவுகிறது என்று சொன்னால், அதற்கு என்ன காரணம் நிர்வாக கோளாறு தான் காரணம்.

ஒன்று மத்திய அரசை குறை சொல்கிறார்கள். நிலக்கரி கொடுக்கவில்லை என்று சொன்னார்கள். மத்திய அரசு 72,000 மெட்ரிக் டன் எப்போதுமே கொடுத்தது கிடையாது. வேண்டுமென்றால் பழைய சரித்திரத்தை எடுத்து பாருங்கள்.

நான் சொல்வது எங்களை விட 72 சதவிகிதம் அதிகமாக நிலக்கரியை பெற்று, அதற்கு பின்னாலும் இந்த பிரச்சினை
வருகிறது என்றால் நிலக்கரி காரணம் என்று சொன்னதால் தான் இதனை நான் இங்கே சொல்கிறேன்.

எப்போதுமே மார்ச், ஏப்ரல், மே மாதம்-3 மாதம் கோடைக் காலம் என்ற காரணத்தினால் மின் தேவை அதிகமாக இருக்கும். அந்த குறுகிய கால ஒப்பந்தத்தில் 1,000-லிருந்து 2,000 மெகாவாட் வாங்க வேண்டும். அதே போல, நிலக்கரி கையிருப்பு என்பது காற்றாலை மின்சாரம் வருகின்ற போது நம்முடைய அனல் மின் நிலையத்தின் உற்பத்தியை நிறுத்தி, அந்த நிலக்கரியை நாம் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

இல்லையென்றால் நாம் ஏற்கனவே அதற்கு இறக்குமதி செய்தோ, அல்லது மத்திய அரசுடன் பேசியோ அந்த நிலக்கரியை கையில் வைத்திருக்க வேண்டும். அதைத்தான் நான் நிர்வாக தவறு என்று சொன்னேன்.

வேறொன்றும் நான் சொல்லவில்லை. அந்த 3 மாதத்தில் எப்போதுமே பிரச்சினை இருக்கும். அப்போது முன்கூட்டியே நாம் வாங்கினால், விலையும் சற்று குறைவாக இருக்கும். அப்படி விலை குறைவாக இருக்கின்ற போது, மின்சார வாரியத்திற்கும் இழப்பு இல்லாமல் இருக்கும் என்று தான் நான் சொல்கின்றேன்.

அமைச்சர் பேசுகின்றபோது, வெளியில் சொன்னாலும் சரி, உள்ளே சொன்னாலும் சரி என்று சொன்னார். நான் சொல்கிறேன், மே 7 வரை மின் வெட்டு இல்லை. மே 7 ல் ஆட்சிக்கு வந்ததற்கு பின்னால், மின் வெட்டு வந்தவுடன், பராமரிப்பு பணி இல்லை. அதனால் மின்வெட்டு ஏற்பட்டது என்று சொன்னார். அதற்கு அணில் புகுந்து விட்டது. அதனால் மின் வெட்டு ஏற்பட்டது என்று சொன்னார். நான் சொல்லவில்லை. அவர் சொன்னார்.

நானே விளக்கம் சொல்கிறேன் உங்களுடைய அருகாமையிலிருக்கும் மாவட்டமான தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ஒரு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பத்தினர் ஒரு வழக்கை
தொடுக்கின்றார்கள்.

பின் வாரியத்தினுடைய கவனக்குறைவினால் இந்த மின் விபத்து ஏற்பட்டது என்று அவர்கள்” வழக்கு தொடுக்கிறார்கள் அவர்கள் நீதிமன்றத்துக்கும். செல்கின்ற போது, டிரான்ஸ்மீட்டருக்குள் ஒரு அணில்புகுந்து விட்டது.

அதனால் விபத்து ஏற்பட்டது என்று சொல்கிறார்கள். அதாவது அந்த விபத்து, அந்த தவறு அணிலினால் தான். அதனால் உயிரிழப்பு ஏற்பட்டது என்று அதிகாரிகள் அபிடவிட்டில் கொடுத்திருக் கிறார்கள். அதே அதிகாரிகள் தானே அவர்களுக்கும் கொடுத்திருப்பார்கள். அணிலை சாப்பிட்டாகி விட்டது

அதற்காக நான் சொல்லவில்லை. மின்மாற்றி இணைப்பு ஏற்பட்ட தவறால் அந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம். தமிழ்நாடு முழுவதும் போனதற்கு நான் சொல்லவில்லை. அதனால் தான் சொல்ல வருகிறேன்.

கோடை காலம் என்று சொன்னால், மூன்று மாதங்களுக்கு குறுகிய கால ஒப்பந்தம் போட்டால் தான் எதிர்காலத்தில் சிறப்பாக இருக்கும் என்பதற்காக தான் இந்த கருத்தை சொல்ல வந்தேனே பொழிய, வேறு எந்த அடிப்படையிலும் நான் சொல்லவில்லை.

இன்னொரு மின் நிலையத்தில் நான் அந்த விஷயத்தை எடுக்கக்கூடாது என்றிருந்தேன். நானும், எதிர்க்கட்சி தலைவரும் பதில் சொல்ல வேண்டுமென்று அமைச்சர் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். பிஜிஆர் நிறுவனத்திற்கு கொடுத்ததை பற்றி சொன்னார், எல் ஒன் வந்தார்கள்.

அவர்கள் வந்ததற்கு பிறகு, அவர்கள் வங்கி உத்தரவாதம் கொடுக்காத காரணத்தினால், நாங்கள் ரத்து செய்து விட்டோம். நான் அந்த விஷயத்திற்குள் செல்ல திருப்பவில்லை. அமைச்சர் பதில் சொல்ல வேண்டுமென்று சொன்ன காரணத்தினால், நான் அதை பற்றி சொல்ல வருகின்றேன்.

அதேபோல, “அனல் மின் நிலையங்களை பொறுத்தவரையில் நாங்கள் அதிகமாக இயக்குகிறோம். நீங்கள் அதிகமாக இயக்கவில்லை;” என்று சொன்னார். அடுத்த மாதம் காற்றாலை மின்சாரம் வரப்போகின்றது. காற்றாலை மின்சாரம்
4,000-லிருந்து 5,000 மாபெரும் வாட மின்சாரம் உற்பத்தியாக போகின்றது. அவ்வாறு உற்பத்தியாகின்ற போது.

must run satus இருக்கிறது. இல்லையென்றால் அவர்கள் நீதிமன்றத்திற்கு அவர்களுடைய lobby, பெரிய lobby என்பது
பேரவை தலைவருக்கே நன்றாக தெரியும். அனல் மின் நிலையங்களை நிறுத்தித்தான் ஆக வேண்டும். அவ்வாறு அனல் மின் நிலையங்களை நிறுத்துகின்ற போது தான், உற்பத்தி குறைகிறது என்று நான் சொல்கிறேன்.

நாங்கள் எப்பொழுதும் அனல் மின் நிலையங்களை வேண்டுமென்று நிறுத்தியது கிடையாது. யாராக இருந்தாலும் நிறுத்துவது கிடையாது. அடுத்து வரவிருக்கும் மே மாதம் காற்றாலை மின்சாரம் வந்ததற்கு பிறகு, அனல் மின் நிலையத்தில் உற்பத்தியைகுறைக்க வேண்டும்.

ஏனென்று சொன்னால், வெளியே வாங்குகின்ற மின்சாரம், மற்ற மின்சாரத்திற்கு குறைத்தார்கள் என்று சொன்னால், மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி, fixed cost என்று, நாம் கட்டாயம் கொடுத்தாக வேண்டும் நான் பேசி முடித்து விடுகிறேன். பிறகு சொல்லுங்கள். நாம் fired cost கொடுக்க வேண்டுமென்ற சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினால் தான், நம்முடைய அனல் மின் நிலையங்களை மட்டும் நிறுத்தினால் லாபகரமாக இருக்கும்.

இரண்டாவது காரணம். exchange-ல் நாம் power வாங்கினோம் என்று சொல்லால், ரூ.4, ரூ.3.50-க்குக் கிடைக்கின்றது. நம்முடைய அனல் மின் நிலையங்களில் நாம் உற்பத்தி செய்கின்றபோது, ரூ.5 முதல் ரூ.8 வரை ஆகின்றது. ஆக, அதற்காகவும், நாங்கள் அனல் மின் நிலையங்களை நிறுத்துகின்றோம்.

ஏனென்று சொன்னால், அந்தக் காலகட்டத்தில் மின்சார வாரியத்திற்கு எது லாபகரமாக இருக்குமோ, அதனை நாங்கள் செய்திருக்கின்றோம். செய்வார்களா என்பது எனக்கு தெரியாது. அதனை இந்த அரசு நிறுத்தியதற்கு காரணம், உற்பத்தி குறைந்ததற்கு காரணம், நாங்கள் வேண்டுமென்று தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்க வேண்டுமென்பதற்காக நாங்கள் அவ்வாறு செய்யவில்லை.

சொன்னாலும், தமிழகம் எப்பொழுதும் மின் மிகை மாநிலம் இல்லை என்று சொல்கிறார்கள். நிதியமைச்சர் தற்போது அவையில் இல்லை. அவரும் அவ்வாறு சொன்னார். நான் சொல்கிறேன். இந்தியாவில் எந்த மாநிலமாவது சொந்த
உற்பத்தியில் மின் மிகை மாநிலம் என்ற பெயரைபெற்றிருக்கிறதா என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

மத்தியத் தொகுப்பிலிருந்து மின்சாரம் வாங்கப்படுவது, நீண்ட கால கொள்முதல் உள்ளிட்டவற்றை அனைத்தையும் சேர்த்து தான் நாம் நம்மை மின் மிகை மாநிலம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். மின் மிகை மாநிலம் என்று சொல்கின்ற போது, அப்படி ஒரு மின்வெட்டு வருகின்ற போது, ‘எங்களுடைய ஆட்சி காலத்தில் ஏற்படவில்லை.

உங்களுடைய ஆட்சி காலத்தில் மின்வெட்டு வருகின்ற போது, மக்கள் பேசிக்கொள்கிறார்கள்’ என்பதைத்தான் நானும் வெளியே சொன்னேன். ஆகவே இதில் வேறொரு கருத்து இல்லை. கவனிக்கவில்லையென்றால், * தமிழ்நாட்டில்
உருவாகி விடும். அதனால் மீண்டும் தமிழ்நாட்டில் மின்வெட்டு உருவாகி விட்டதோ, என்ற நிலைமை உருவாகி விடும் என்று சொல்கிறேன்.

அக்டோபர், நவம்பர் மாதங்களிலேயே நம்முடைய மின் தேவை எந்தளவிற்கு இருக்கிறதோ, அதனை எதிர்பார்த்து, அந்தளவிற்கு மின்சாரத்தை நாம் வாங்க வேண்டுமென்று தான் நான் சொன்னேன். சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் கேள்வி வைக்கின்ற போது, எடப்பாடியார் 1-4-2021-லிருந்து விவசாயத்திற்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கினார் என்று சொன்னார்.

அதற்கு அமைச்சர் பதில் சொல்லுகின்ற போது, “நீங்கள் தேர்தல் வருகின்ற காரணத்தால் வழங்கி விட்டீர்கள், கட்டமைப்பு இல்லை, கட்டமைப்பு இல்லாத காரணத்தினால் எங்களால் அவ்வாறு வழங்க இயலவில்லை” என்று சொல்லியிருக்கின்றார். நான் சாதாரண அரசு பள்ளியில் கூட படித்திருக்கலாம்.

இங்கிருக்கின்ற அனைவருக்கும் நான ஒன்று கேட்கின்றேன், ஒரு நிமிடம் கொடுத்தாலும், அதே கட்டமைப்பு தான், 24 மணி நேரம் கொடுத்தாலும் அதே கட்டமைப்பு தான். இதில் கட்டமைப்பு எங்கு சரியில்லை.

அமைச்சர் அதிகாரிகளை கேட்டு தெரிந்து கொள்ளட்டும். எங்களுடைய ஆட்சி காலத்திலேயே 17120 மெகாவாட் அளவிற்கு மின் நுகர்வு வந்தது. அமைச்சர் சொன்னார், 108 நாட்கள் கூட, 15,000, 16000 மெகாவாட் இருந்தாலும் கூட, தடையில்லாத மின்சாரத்தை வழங்கிய அரசு எடப்பாடியார் அரசு.

விவசாயிகள் டவர் லைன். மின்சாரத்துறை அமைச்சர் எதிர்க்கட்சியில் இருந்தபோது, டவர் லைன் அமைப்பதற்கு விவசாயிகள் போராட்டத்திற்கு எந்த அளவிற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள் என்பதெல்லாம் நன்றாக தெரியும், இப்போது அவரது ஆட்சிக்காலம் வந்தவுடன், காவல்துறையை வைத்து உடனடியாக அந்த டவர் லைன் போடாமல், அதற்கு மாற்றுக்கருத்து கிடையாது.

ஆனால் இன்றைய முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும் போது கூறினார். “இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலம்.

இதற்கு அனைவரும் ஒத்துழைத்தால் தான், இதனை நாம் முழுமையாக நிறைவேற்ற முடியும் என்று சத்தீஸ்கரில் இருந்து மின்சாரத்தை 4000 மெகாவாட் அளவு வரை கொண்டு வருகின்ற டவர் லைனை அமைத்து, தற்போது 4,000 மெகாவாட் கொண்டு வரும் அளவிற்கு வசதி வாய்ப்புகள் இருந்தும், நாம் ஏமாந்து விட்டோமோ என்று தான் அந்த கருத்தை சொல்கிறேன்.

ஆனால், இப்பொழுது. விவசாயிகள் போராடுகிறார்கள், ஏன் என்றால், அவர்களுடைய நிலங்கள் விளை நிலங்களாக இருக்கின்றன. அவர்களுடைய விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. Value அதிகம் உள்ள நிலங்களும் பாதிக்கப்படுகின்றன.

அதற்காக அவர்கள் போராடுகின்றபோது, அமைச்சர் அந்த விவசாயிகளை 4, 5 முறை சந்தித்ததாக பேட்டி அளித்திருக்கின்றார்கள். ஆனால், அதற்கு பின்னால் எந்தத் தீர்வும் இல்லை.

முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக
இருந்தபோது எங்கள் போராட்டத்தின் போது, எங்களுடன் இருந்து, நாங்கள் ஆட்சிக்கு வருகின்ற காலத்தில், எங்களுக்கு உதவி செய்வோம்.

எங்களுக்கு புதைவடம் அமைத்துதருவோம் என்றெல்லாம் சொல்லியிருக்கின்றார். அதை முதலமைச்சர் அவர்களிடத்தில் சொல்லுங்கள் என்று அவர்கள் உங்களிடத்தில் சொன்னதாகவும், விவசாயிகள் சங்க தலைவர் ஈசன் பேட்டி கொடுத்திருக்கின்றார். மக்களுக்கு நன்றாக தெரியும். அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை.

அமைப்பதிலே அந்த இடத்தில் எதிர்க்கட்சிகளெல்லாம் போராடினார்கள். டவர் லைன் அனைத்து ஆனால் அண்ணன் ஒரு சாமானியராக அன்றைத்தினம் ஆட்சியிலிருந்த காரணத்தினால், அனைத்து எதிர்க்கட்சிகளும் போராடி, Tube light எரிவதையெல்லாம் காண்பித்தார்கள்.

இப்போது Tube light இல்லை மங்கிப்போய் விட்டதா என்று எங்களுக்கு தெரியவில்லை. அடுத்தது மின் meter, விவசாயத்திற்கு நாங்கள் ஒரே ஒரு நாள் xa1-ல் moter-க்கு sample-க்காக வைத்தோம். எதற்காக, line loos எவ்ளவு என்று கண்டு பிடிப்பதற்காக, அதையே தான் நீங்களும் செய்கிறீர்கள்.

அன்றைக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கவன ஈர்ப்பு தீர்மானம், போராட்டம், விவசாய சங்கம் எல்லோருமே போராட்டம் நடத்தினார்கள். எங்கள் எடப்பாடியார் ஒரு விவசாயி. விவசாயத்தை பற்றி முழுமையாக தெரிந்தவர். நாங்கள் wire loss எவ்வளவு என்று கண்டுபிடிப்பதற்காக தான், இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என்று சொன்னோம்.

இன்றைக்கு அனைத்து விவசாயிகளுக்குமே meter வைக்கிறீர்களே எந்த அடிப்படையில் வைக்கின்றீர்கள்? அன்றைக்கு ‘மத்திய அரசுக்கு பயந்துகொண்டு வைக்கிறீர்கள் என்று பேசியவர்கள், யாருக்கு பயந்து கொண்டு இப்பொழுது வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

சட்டமன்றத்தில் இந்த பிரச்சினை வந்தவுடன் ஊடகங்கள் எல்லாம் பிரேக்கிங் நியூஸ் போட்டவுடன் உடனடியாக முதலமைச்சர் என்ற அழைத்து, உடனடியாக அதை நிறுத்தி விடுங்கள் என்று சொல்லி விட்டார். நாங்கள் நிறுத்தி விட்டோம். இப்போது 1 லட்சம் மின் இணைப்புகள் கொடுத்திருக்கின்றீர்கள்.

அத்தனை பேருக்குமே வைத்திருக்கிறீர்கள் என்றால் நாங்கள் வைத்த போது குற்றச்சாட்டு கூறியவர்கள் இன்றைய தினம் வைக்கிறீர்களே இதை உங்கள் கவனத்திற்கே விட்டு விடுகின்றேன்.

அதுபோல 2.200 கோடி ரூபாய் வட்டி குறைப்பு என்று சொல்லியிருக்கின்றார். நான் இரண்டு நிதி நிலை அறிக்கையிலும் மின்சார வாரியத்தினுடைய கடனை முழுமையாக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று. ஆனால் கொள்கை விளக்கக் குறிப்பிலே பார்த்தோமென்றால் 2021-22-ம் ஆண்டு 13,400 கோடி ரூபாய் நஷ்டம் என்று சொல்லியிருக்கின்றார்கள்.

தமிழக அரசு முழுமையாக ஏற்றுக்கொண்ட பிறகும் ஏற்பட்ட நஷ்டமா? இதையெல்லாம் ஆர்பிஐ வட்டி குறைந்ததற்குப் பிறகு வட்டி குறைந்திருக்கின்றதா அல்லது எந்த வங்கியில் எவ்வளவு கடன் இருக்கின்றது. யாரோடு பேசி எவ்வளவு வட்டியை குறைத்தீர்கள். 2.200 கோடி ரூபாய் எப்படி குறைந்தது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.