சிறுபான்மையினர் காவலனாக என்றென்றும் கழகம் இருக்கும்

மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி
மதுரை
சிறுபான்மையினர் காவலனாக என்றென்றும் கழகம் இருக்கும் என்று மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறினார்.
புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் பெரியரத வீதி சிக்கந்தர் தர்ஹா நூலகத்திற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன்செல்லப்பா 7 பாகங்கள் கொண்ட திருக்குர்ஆன் தமிழாக்க நூல்களை ஜமாத் நிர்வாகிகளிடம் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
சிறுபான்மையின மக்களின் பாதுகாவலராக கழகம் திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் கழகம் 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. அப்போது சிறுபான்மையின மக்களுக்கு எண்ணற்ற சலுகைகள், திட்டங்கள் வழங்கப்பட்டன. ஆனால் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த திட்டங்களும் வழங்கவில்லை. ஆகவே இனி வரும் தேர்தல் காலங்களில் கழகத்திற்கு மகத்தான ஆதரவை வழங்க வேண்டும். சிறுபான்மையினர் காவலனாக கழகம் என்றென்றும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், ஒன்றிய கழக செயலாளர்
நிலையூர் முருகன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கவிஞர் ப.மோகன்தாஸ், வட்ட செயலாளர் பொன்.முருகன், மாவட்ட கலைப்பிரிவு இணை செயலாளர் பாலகிருஷ்ணன், சிறுபான்மையினர் பிரிவு துணை செயலாளர் அக்பர் அலி, மற்றும் ஆட்டோ முருகன் ராஜேந்திரன், கூடல் கணேசன், பாபு கண்ணன் உள்பட பலர் கொண்டனர்.