மற்றவை

பசும்பொன் நினைவிடத்தில் கழகம் சார்பில் மாலையணிவித்து மரியாதை

சென்னை,

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் 115-வது ஆண்டு பிறந்தநாள் மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு கழகத்தின் சார்பில், அவரது நினைவிடத்தில் நேற்று மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமைக்கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் என ஆயிரக்கணக்கான கழகத்தினர் பங்கேற்றனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 115-வது ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் 60-வது குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனார் நினைவிடத்தில், கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியின் ஆணைக்கிணங்க, தலைமை கழக செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.எல்.ஏ, கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான நத்தம் இரா.விசுவநாதன் எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திருவாரூர் மாவட்ட கழக செயலாளருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ,

கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ,

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ, கழக மகளிர் இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன்,

ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் தச்சை என். கணேசராஜா, சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ, தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் சி.கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ, விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பி.கே.வைரமுத்து, திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார், கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா,

கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளருமான ஓ.எஸ்.மணியன், கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, கழக அமைப்பு செயலாளர் வி.கருப்பசாமி பாண்டியன், கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளர் முருகையா பாண்டியன், முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் உள்பட கழக நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் பங்கேற்று தங்கக்கவசம் அணிவிக்கப்பட்ட, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாக கலந்துகொண்டு தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஏற்பாடு செய்து, பார்த்திபனூர் விலக்கு அருகே மேற்கண்ட நிர்வாகிகளுக்கு வரவேற்பு அளித்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற குருபூஜை விழாவில் 5,000க்கும் மேற்பட்ட கழக தொண்டர்கள் பங்கேற்றனர்