வரும் முன் காக்க தவறிய, திராணியற்ற விடியா அரசு-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை,
தி.மு.க ஆட்சி என்றாலே, தீவிரவாதமும், வெடிகுண்டு கலாச்சாரமும் தான், வரும் முன் காப்போம் என்ற அரசே இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
சென்னை, நந்தனம் பகுதியில், முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க ஆட்சி காலத்தில், சீர் மரபினர் துறை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. 91 மற்றும் 96ம் ஆண்டு காலக்கட்டத்தில், அந்த துறையின் நான் அமைச்சராக, அம்மாவின் நல்லாசியுடன் பல்வேறு பணிகள் செய்யப்பட்டது. குறிப்பாக, ராஜதானி, உசிலம்பட்டி, நாட்டார் மங்கலம் பகுதிகளில் 250 பள்ளிகள் இருந்தன. அவற்றின் பள்ளிகளின் தரம் உயர்த்திட, செம்மைபடுத்தி, விடுதி என எல்லாவிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அன்று பிறபடுத்தபட்டோர் அமைச்சராக இருந்த போது, கள்ளர், மறவர், அகமுடையார் என அணைவ்ரும் அன்பில் சிறந்த மக்கள் அவர்கள் ஒரு குடையின் கீழ் வர வேண்டும். முக்குலத்கோர் என அழைக்க வேண்டும் என்று அம்மா உத்தரவிட்டதின் பேரில், உடனடியாக கோப்புகள் தயார் செய்து, அவர்கள் எல்லாரும் முக்குலத்தோர் பிரிவுக்கு கையெழுத்திட்டவர் அம்மா.
அதேபோன்று, தேவர் திருமாலுக்கு புகழ் சேர்க்கும் வகையில், 96ம் ஆண்டு காலத்தில், அம்மா அவர்களால், இங்கு கம்பீரமான திருவுருவ சிலை திறக்கப்பட்டது. 2010ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக, தேவர் திருமாலுக்கு 13 கிலோ தங்க கவசம் அளிக்கப்படும் என அம்மா கூறினார்.
2012ம் வாக்கில், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில், தேவர் திருமாலுக்கு புகழ்மாலை சூட்டி தங்கம் கவசம் அணிவிக்கப்பட்டது. தேவர் திருமாலுக்கு புகழ் சேர்க்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். பல சந்தர்ப்பங்களிளில், அம்மா அவர்கள் பசும்பொன் அல்லது நந்தனம் வருவார்கள், ஆக மொத்தம் தேவர் திருமாலுக்கு புகழ் சேர்ப்பது அதிமுக தான்.
திமுக அரசு வரும் போதெல்லாம், இரண்டு விஷயம் தலை தூக்கும். தீவரவாதமும், வெடிகுண்டு கலாச்சாரம் தான் . இது திமுக ஆட்சியில் எப்போதும் நடக்கின்ற விஷயம். 89, 91ம் ஆண்டு , திமுக ஆட்சி இரண்டாண்டு காலம் தான் இருந்தது. அந்த ஆட்சி எதனால் கலைக்கப்பட்டது. தீவிரவாத்த்தை ஊக்கப்படுத்தியதால் கலைக்கப்பட்டது.
அதேபோன்று இந்த முறையும் வன்முறை, பிரச்சினைகள் உருவாவது திமுக ஆட்சியில் சர்வ சாதாரணம். கூஜா வெடிகுண்டு, பைப் வெடிகுண்டு, இப்போது கார் சிலிண்டர் வெடிகுண்டு, இதை தடுக்க நடவடிக்கை எடுக்க திமுக அரசாங்கத்திற்கு திராணி கிடையாது. ஒரு அராசங்கம் என்ன செய்ய வேண்டும். வரும் முன் காக்க வேண்டும். அது தான் ஒரு அரசாங்கத்தின் புத்திசாலித்தனம்.
வந்த பின் தவிக்கிறது. திறமையில்லாத அரசாங்கம். பல பத்திரிகைகளில் என்ன சொல்றாங்க , அவங்க ஆறு இடத்தில திட்டமிட்டு இருக்காங்க என செய்தி சொல்லுது. துரதிருஷ்டத்திலும் ஒரு அதிர்ஷ்டம் என்னவென்றால், அங்கேயே வெடித்து விட்டது. ஆறு இடத்தில் வெடித்து இருந்தால் எத்தனை உயிர் போயிருக்கும். 98ம் ஆண்டு எத்தனை பேர் இறந்தார்கள். 52 பேர் இறந்தார்கள். முன் கூட்டியே நிர்வாகம் ஏன் கவனிக்கவில்லை.
அரசும் கவனிக்கவில்லை. காவல் துறையும் கவனிக்கவில்லை. அதனால் வரும் காக்க தவறியது இந்த திமுக அரசு, இந்த தாக்குதல் எப்படினா? ஒற்றை ஓநாய் தாக்குதல் என பெயர் வைத்துள்ளார்கள். இதை காவல்துறை, நுண்ணறிவு பிரிவு, உளவுத்துறை ஏன் கணிக்கவில்லை. எங்க அதிமுக ஆட்சியிலும் , இதே காவல் துறை தான். அப்பப்போ தகவல் தந்து, உடனடி நடவடிக்கை எடுத்தார்கள். மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தார்கள். எல்லா அரசாங்கத்திலும் இதுபோன்ற விஷயம் தலை தூக்கும்.அதை ஆரம்ப கட்டத்திலே முறியடிப்பது தான் புத்திசாலியான அரசாங்கம்.
மக்களை காக்கும் அரசாங்கம், திறமையான அரசாங்கம் அதை தான் அதிமுக செய்தது. எங்கள் ஆட்சியில் வகுப்புவாதம், வன்முறை , தீவிரவாதம் பிரச்சினை இல்லை. அதுபோன்று, துப்பாக்கி, வெடிகுண்டு கலாச்சாரம் கிடையாது. ஆனால், இது எல்லாம் திமுக ஆட்சியில் சர்வசாதாரணமாக உள்ளது.
திமுக ஆட்சி எப்போதெல்லாம் வருகின்றதோ? இவையாவும் சர்வ சாதாரணமாக இருக்கும். மாநிலத்தில், சட்டம் ஒழுங்கு காவல்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில போலீஸ் என்ன செய்ய வேண்டும்? அவர்களின் கடமையை செய்ய வேண்டும். மாநில போலீஸ் என்ன தூங்குகிறதா?
ஒட்டு மொத்தமாக கணிக்க தவறியதால், பெரும் ஆபத்து ஏற்பட இருந்தது. ஆனால் கார் வெடிகுண்டோடு போனது. கார் குண்டு வெடிப்பை கூட அவர்களால் கணிக்க முடியவில்லை. தமிழ்நாடு மக்களுக்கு பாதுகாப்பு என்பதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் என்ன விரும்புவார்கள் அமைதியான வாழ்வை, அதை கூட கொடுக்க இந்த அரசாங்கம் தவறினால், அதிமுக குரல் கொடுக்க தயங்காது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.