இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க-கழக அவைத்தலைவர் அ.தமிழ் மகன் உசேன் பேட்டி

கோவை
தமிழகத்தில் மீண்டும் எடப்பாடியார் தலைமையிலான கழக ஆட்சி அமைந்திட கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் ஹஜ்ரத் நூர்சா அவுலியா தர்காவில் கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட குனியமுத்தூர், சுண்டக்காமுத்தூர், தொண்டாமுத்தூர், செல்வபுரம் பகுதி கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகள் சார்பில் கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஹஜ்ரத் நூர்ஷா அவுலியா தர்கா செயலாளரும், பகுதி கழக தலைவருமான எஸ்.எம்.உசேன், பகுதி கழக செயலாளர்கள் எம்.மதனகோபால், வி.குலசேகரன், பிகே.சீனிவாசன், லாலி ரோடு விஜய், எம்.பெருமாள்சாமி, ஏ.ரபீக், பகுதி துணை செயலாளர் எஸ்.அருணகிரிநாதர், பகுதி பொருளாளர் கேகே.சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதைத்தொடர்ந்து கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி கே.பழனிசாமி அ.தி.மு.க. நிரந்தர பொதுசெயலாளராக வேண்டியும், வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற வேண்டும் என மக்கள் விரும்பும் நிலையில், மீண்டும் முதல்வராக எடப்பாடியார் வர வேண்டும் என 75 மாவட்டங்களில் 70 தர்காக்களிலும், இந்திய துணைக்கண்டத்தில் இடம்பெற்றுள்ள 13 மாநிலங்களில் உள்ள தர்காக்களிலும் சிறப்பு பிரார்த்தனை எனும் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளேன்.
39வது மாவட்டமாக கோவை மாவட்டம் வந்துள்ளேன். எடப்பாடியார் அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டி கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெறுகின்ற இந்த சிறப்பு பிரார்த்தனையில் மிக அதிகமான கழக தொண்டர்கள் சமய வேறுபாடின்றி கலந்து கொண்டுள்ளனர்.
மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடியார் பதவியேற்பார். தமிழகத்தில் அ.தி.மு.க துவக்கப்பட்டபோது புரட்சித்தலைவரால் அறிவிக்கப்பட்ட முதல் மாவட்ட அமைப்பாளரே நான் தான். ஏறத்தாழ கடந்த 50 ஆண்டுகளாக அனைத்து தரப்பு மக்களுக்கும் எண்ணற்ற திட்டங்களை அள்ளித் தந்த ஒரே இயக்கம் அ.தி.மு.க மட்டுமே.
ஒருமுறை பள்ளிவாசல்களிலும் மதராஸாக்களிலும் இமாம்களாக பணியாற்றுகின்ற எங்களுக்கு எந்த ஊதியமும் கிடையாது என முஸ்லிம் பெரியவர்கள் புரட்சித்தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். புரட்சித்தலைவர் இஸ்லாம் பெரியோர்களுக்கு உதவும் வகையில் ஒரு மணி நேரத்தில் உருவாக்கிய அற்புத திட்டம் தான உலமாக்களுக்கு ஒய்வூதியம் எனும் திட்டம். புரட்சித்தலைவர் வழியில் புரட்சித்தலைவி அம்மா அவர்களும், எடப்பாடியார் அவர்களும் ஓய்வூதியத்தை அதிகரித்து வழங்கினார்கள்.
ஒரு சில கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு பாதுகாவலர்கள், இஸ்லாமியர்களுக்காக வாழ்கிறோம் என்று கூறுவார்கள்.
ஆனால் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே. ரமலான் நோன்பு மாதத்தில் நோன்பு கட்சி தயாரிக்க 5432 மெட்ரிக் டன் அரிசி வழங்கியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அதை மேலும் அதிகரித்து தந்தவர் எடப்பாடியார்.
அதுமட்டுமின்றி ஹஜ் யாத்திரை செல்ல மானியத்தொகை முப்பதாயிரம் வழங்கியதும் அதிமுக மட்டுமே.வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்த இஸ்லாமிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரும் வகையில் கடன் உதவி வழங்கியதும் அதிமுக ஆட்சி மட்டுமே. கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை கழக ஆட்சி காலத்தில் எண்ணற்ற திட்டங்களை பெற்று தந்தவர் எஸ்.பி.வேலுமணி.
ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் கோவைக்கு இதுவரை ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை. எங்கு பார்த்தாலும் அடக்குமுறை,வன்முறை, பாலியல் தொந்தரவு உள்ளிட்ட சட்டத்திற்கு விரோதமான செயல்களே நடைபெறுகிறது. இங்குள்ள சாலைகளை பார்த்தால் குளங்களை போல காட்சி அளிக்கிறது.
இன்றைய திமுக ஆட்சியை எதிர்த்து யாராவது போராட முடியுமா? கழக ஆட்சி களத்தில் எஸ்.பி.வேலுமணி பொதுமக்களுக்கு ஒரு குறை என்றால் உடனே நிறைவேற்றி தந்தார். ஏன் இதை சொல்கிறேன் என்றால் அதிமுக இஸ்லாமியர்களின் பாதுகாப்பு கேடயம். எந்த அரசியல் கட்சியும் ரமலான் மாதத்தில் இப்தார் நோன்பு விருந்தை நடத்தாத சூழ்நிலையில் கூட தம் சொந்த செலவில் 21 ஆண்டுகள் இப்தார் நோன்பு எனும் நிகழ்ச்சியை நடத்தியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இந்த இயக்கத்தில் என்னைப்போன்ற இஸ்லாமியர் மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும் வகையில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று செயல்படுகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்றதேர்தலிலும் அ.தி.மு.க வெல்ல வேண்டும். எடப்பாடியார் மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டும் என்று இன்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டோம்.
இவ்வாறு கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் தோப்பு அசோகன், மாவட்ட கழக துணை செயலாளர் என்.கே.செல்வதுரை, பீளமேடு துரைசாமி, மதுக்கரை நகர கழக செயலாளர் மதுக்கரை சண்முகராஜா, ஒன்றிய செயலாளர் ஜி.குமரவேல், இகே.பழனிசாமி, கேவி.முனுசாமி, பொதுக்குழு உறுப்பினர் சுசிலா மாணிக்கராஜ்,
நகர கழக துணை செயலாளர் ஜோசப், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் டி.லட்சுமிகாந்தன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் குறிச்சி மரியா,
சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவர் கே.செபி செபாஸ்டின், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் கே.சிவகுமார், வக்கீல் மாணிக்கராஜ், பாசறை நிஷ்கலன், பகுதி தலைவர் கே.ஆர்.செல்வராஜ், பேரூராட்சி கழக செயலாளர் சுந்தர்ராஜ், வார்டு கழக செயலாளர்கள் சித்திரை செல்வராஜ், ஏ.செல்லப்பன், ஜூனியர் ராஜா, கே.பி.பாஸ்கரன், எம்.ஜெகதீசன், விவேகானந்தன், ஜாஸ் ஜெகதீஷ், மணல் நாராயணன், எஸ்.சி.செல்வராஜ், எஸ்டி.கதிரேசன், ஜனார்த்தனன், பிரகாஷ், வேணுகோபால், கரும்புக்கடை முஜி, தங்கம் ரகூப்,கேபிள் பஷீர், குஞ்சாலி, கேபிள் சரவணன், விஸ்வநாதன், பத்மநாபன், டி.கே.கண்ணையன், தர்மராஜ், மாணிக்கம், பாலகிருஷ்ணன் மற்றும் மதுரை விடி.மணி, சென்னை ராஜேஷ், வெங்கடேஷ், ஜலீல் பாய், ஜின்னா பாய், ஹஜ்ரத் நூர்ஷா அவுலியா தர்கா தலைவர் சையத் அஜ்முல் உசேன்,
முத்துவல்லி ஷாநவாஸ், லியாகத் அலிகான், பீர் முகமது நூர் முகமது, பாபு, முஸ்தபா, ஆட்டோ பாபு, பஷீர், பகுதி கழக நிர்வாகிகள் சிந்து அகல்யா, செல்வி, கலாவதி, சோமசுந்தரம், எஸ்.வி.தேவராஜ், மாபா.ஆனந்தன், அப்துல் ரகுமான், குமரவேல், இளங்கோ, கேசி.ஆ.செல்வகுமார், வடிவேல், சதீஷ்குமார்,தேவராஜ், டி.சுரேஷ்குமார், அர்ஜூன்,
பெரோஸ், சாய் ஷியாம், கே.கோபிநாத், சம்பத்குமார், பாண்டியராஜன், சையது பஷீர், கரிகாலன், ராதாகிருஷ்ணன், ரத்னவேல், மகளிர் அணி செயலாளர் கிளி என்கிற ஷகிலா பேகம், நிர்வாகிகள் பூங்கொடி, மணி,நிஷா, ரெஜினா பேகம், பாக்யா, மகேஸ்வரி, பூங்கொடி, தனலட்சுமி, சுகந்தி, ராஜேஸ்வரி மற்றும் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.