விடியா தி.மு.க. அரசை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம்-எதிர்க்கட்சி துணை கொறடா தலைமையில் கழகத்தினர் ஆவேசம்

ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் இடைத்தேர்தலில் முறைகேடு நடந்தது. ஆளும் கட்சியின் கைக்கூலியாக செயல்பட்ட தேர்தல் அலுவலரை கண்டித்தும், விடியா திமுக அரசை கண்டித்து மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்எல்ஏ தலைமையில் கழகத்தினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சியில் நேற்று பேரூராட்சிக்கான தலைவர் இடைத்தேர்தலானது நடைபெற்றது. பேரூராட்சியில் 14 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர் .கழகம் மற்றும் கூட்டணியை சேர்ந்த 7 வார்டு உறுப்பினர்கள், தி.மு.க.வை சேர்ந்த 4 வார்டு உறுப்பினர்கள் மற்றும் 3 சுயேட்சை உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 14 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று பேரூராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.
கழகம் சார்பில் வரலட்சுமி தினகரன் மற்றும் தி.மு.க. சார்பில் சுயேட்சை வேட்பாளர் சங்கீதா மகேஷ் ஆகியோர்
போட்டியிட்டனர். தி.மு.க.வை சேர்ந்த வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கழக கூட்டணி உறுப்பினர்கள் 7 பேர் இருக்க தி.மு.க வெற்றிபெற்றதாக விடியா தி.மு.க அரசின் கைக்கூலி தேர்தல் அலுவலர் சரவணன் அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் முறைகேட்டில் ஈடுபட்டு, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு, தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சங்கீதா மகேஷ் வெற்றிபெற்றதாக அறிவித்தார்.
இதனையடுத்து இன்று மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்எல்ஏ தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் விடியா திமுக அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறைமுக தேர்தலில் கழக வேட்பாளருக்கு ஆதரவாக அளித்த வாக்கில் ஒரு வாக்கு செல்லாது என அறிவித்து திமுகவினர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் அறிவித்தார். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேர்மையான முறையில் தேர்தல் நடத்தாமல் திமுகவினரை போல் செயல்பட்டு, திமுகவினருக்கு வெற்றி என அறிவிக்கும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
விடியா திமுக அரசின் கைக்கூலியாக செயல்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடாவும், மாவட்ட கழக செயலாளருமான சு.ரவி எம்எல்ஏ, தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கழகத்தினர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித் மாவட்ட கழக செயலாளர் சு.ரவி எம்எல்ஏ , ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள திமுக அமைச்சர் ஆர்.காந்தி உத்தரவின் பேரில் நடைபெற்ற அம்மூர் பேரூராட்சியில் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக அறிவித்ததாக குற்றம் சாட்டினார். அதிமுகவை எதிர்த்து நேரடியாக போட்டி போடா திராணி இல்லாத ஆளுங்கட்சி திமுக , சுயேட்சை வேட்பாளரை வைத்து பேரூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டதாக தெரிவித்தார்.