தற்போதைய செய்திகள்

திண்டிவனம் நகராட்சியை கண்டித்து எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்,

திண்டிவனத்தில் கழிவுநீர் சாலையில் ஓடி துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால் கழக சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனன் தலைமையில் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலம் அருகே உள்ள திருவள்ளுவர் போக்குவரத்து கழகத்தின் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. அந்த பேருந்தில் நிலையத்தில் தற்பொழுது பேருந்து செல்லாத நிலையில் அப்பகுதியில் வணிக வளாகங்கள் மற்றும் கடைகள், கழிப்பறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் கழிவு நீர் வெளியேறி சாலையில் ஓடி துர்நாற்றம் வீசுவதாக திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தடுக்க சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் கடந்த வாரம் அப்பகுதி ஆய்வு செய்து நகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூறினார்.

ஆனால் நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் நேற்று சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் தலைமையில் கழக நிர்வாகிகள் அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்காதே கண்டித்து அப்பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க அப்பகுதியில் எம்சாண்ட் கொண்டு நிரப்பப்பட்டது. இதில் நகர செயலாளர் தீனதயாளன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் மற்றும் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.