தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டவர்களுக்கே குடிநீர் ஒன்றிய செயலாளர் அடாவடித்தனமாக பேச்சு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்
திருநெல்வேலி
தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டவர்களுக்கே குடிநீர் வழங்குவோம் என்று ஒன்றிய தி.மு.க.செயலாளர் அடிவடித்தமான பேசி உள்ளார். இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட கழகத்தை சேர்ந்த கழக பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி தலைமையில் பொதுமக்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்து உள்ளனர்.
இதுகுறித்து கங்கை வசந்தி கூறியதாவது:-
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பஞ்சாயத்துக்குட்பட்ட கங்கைகொண்டானில் 5000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். கடந்த 10 தினங்களாக இந்த பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து கங்கைகொண்டான் பஞ்சாயத்து தலைவி கவிதா பிரபாகரை நேரில் சந்தித்து மனு அளித்தோம். ஆனால் அவர் எந்த பதிலும் கூறிவில்லை.
மீண்டும் பொதுமக்களுடன் நானும் கங்கைகொண்டன் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று விளக்கம் கேட்டோம். அப்போது அங்கிருந்த பஞ்சாயத்து தலைவியின் மாமனார் தி.மு.க.வை சேர்ந்த மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி, தி.மு.க.வுக்கு ஓட்டு போட்ட ஆணைத்தலையூர் பகுதிக்கு மட்டுமே குடிநீர் வழங்குவோம் என்று அடாவடித்தனமாக பதில் அளித்தார்.
கங்கைகொண்டான் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்ற பகுதி. இதை முதலில் சரி செய்து குடிநீர் வழங்குகள் என்று கேட்டதற்கு குடிநீர் மோட்டார் பழுதாகி விட்டது என்று அவர் பதில் கூறுகிறார். பழுதை நீக்க 20 நாட்களாக வேலை பார்க்கிறார்களா, மேலும் புதிய மோட்டார் வாங்கி உள்ளார்கள்.
அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க மறுக்கிறார்கள். எனவே மாவட்ட ஆட்சியர் விரைவான நடவடிக்கை எடுத்து கங்கைகொண்டான் பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்தோம்.
இவ்வாறு கழக பொதுக்குழ உறுப்பினர் கங்கை வசந்தி தெரிவித்தார். அப்போது கழக நிர்வாகிகள் ஜெகநாதன், கண்ணன், முருகன், இசக்கிமுத்து, இசக்கிமுத்து, அசோக், முருகையா, பரமசிவம், மறக்குடி இசக்கிமுத்து மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.