தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் – சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் திட்டவட்டம்

செங்கல்பட்டு
நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் வரும் என்றும் தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் விடை கொடுத்து அனுப்பி விடுவார்கள் என்றும், எடப்பாடியார் தலைமையில் கழகம் அமோக வெற்றிபெற்று தமிழகம் வீறு நடைபோடும். தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்றும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் அஸ்தினாபுரம் பகுதிக்கழகம் சார்பில் கழக செயல்வீராங்கள், வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம், அஸ்தினாபுரத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அஸ்தினாபுரம் பகுதி கழக செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான ஆர்.அருணாசலம் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் சிறப்புரையாற்றி பேசியதாவது:-
தினம் தினம் தி.மு.க.வினர் செய்யும் அராஜகங்கள், அட்டூழியங்கள் மக்களை வெளியில் நடமாடவே அச்சுறுத்துகிறது. மக்களுக்கு பாதுகாப்பற்ற அரசாக இந்த அரசு விளங்குகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நடுநிலையோடு சரியான முறையில் நிலை நாட்டினால் இன்றைக்கு தி.மு.க.வினர் ஏகப்பேட்டோர் மீது வழக்கு பதிவாகியிருக்கும். ஆனால் அதைவிட்டு விட்டு கழகத்தினர் மீது பொய்யான வழக்குகளை போடுவதையே வேலையாக கொண்டு இந்த அரசு செயல்படுகிறது.
மு.க.ஸ்டாலின் தன்னால் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறேன் என்று சொன்ன பிறகும் தி.மு.க.வினர் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபடுகின்றனர். அதிலும் குறிப்பாக அமைச்சர்களின் நாகரிகமற்ற பேச்சுகள் வாக்களித்த மக்களை வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது. இதிலிருந்து தி.மு.க.வினர் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு எந்த அளவுக்கு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வந்தால் தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் விடைகொடுத்து தமிழக அரசியல் வரலாற்றில் அவர்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள். கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் கழகம் அமோக வெற்றிபெற்று தமிழகம் வீறு நடைபோடும். தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.
இவ்வாறு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேசினார்.