தற்போதைய செய்திகள் மற்றவை

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தோல்வியை பரிசாக அளிப்பாளர்கள்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ஆவேசம்

தூத்துக்குடி

பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஏமாற்றிய தி.மு.க.வுக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை பரிசாக மக்கள் கொடுப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ஆவேசமாக தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது குறித்து செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் பேசியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது மக்களுக்கு அதை செய்வேன். இதை செய்வேன் என்று கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை தி.மு.க.வினர் மூட்டை மூட்டையாக அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றனர்.

ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் இதுவரை மக்களுக்கு எந்த ஒரு திட்டங்களை நிறைவேற்றாமல் இருக்கின்றனர். மக்களை சொல்லொணா துயரத்திற்கு ஆளாக்கியுள்ள தி.மு.க. அரசுக்கு விரைவில் வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை பரிசாக கொடுத்து தக்க பதிலடி தருவார்கள்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில் வந்த அ.தி.மு.க. தொண்டர்கள் திமுகவினரின் எந்த சவாலையும் முறியடிக்கும் தகுதி படைத்தவர்கள். விரைவில் வர இருக்கின்ற தேர்தல் மூலம் தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மீண்டும் முதலமைச்சர் ஆவது உறுதி.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் பேசினார்.