செய்யாரில் வாக்காளர் சேர்ப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம்

மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறில் வாக்காளர்கள் சேர்ப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் செய்யாறு, வந்தவாசி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், நகர செயலாளர் வெங்கடேசன், பேரவை மாவட்ட செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் பேசியதாவது:-
வரும் நவம்பர் 12, 13 ஆகிய தேதியில் வாக்காளர் சேர்பது குறித்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் தங்கள் பகுதியில் உள்ள 17 வயது பூர்த்தியடைந்தவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்க வேண்டும். விடுபட்டுள்ள வாக்காளர்கள் பெயர்களை சேருங்கள். வெளியூர் மாறுதலானவர்கள், காலமானவர்கள் உள்ளிட்டவர்கள் பெயர்களை நீக்கம் செய்யுங்கள்.
மேலும் தற்போது உள்ள வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் உள்ளதா எனவும் சரி பாருங்கள், வாக்காளர்கள் சேர்க்கும் போது ஆதார் அட்டை ஜெராக்ஸ் இணைக்கவும். மேலும் இம்முகாமில் மாத கடையில் நவம்பர் 25, 26 தேதிகளிலும் நடைபெறுகிறது.
மேற்கண்ட தகவல்களை கூட்டத்திற்கு வந்துள்ள நகர ஒன்றிய, பேரூர்கழகத்தினர் கிளை வாரியாரியாக தகவல் தெரிவிக்க வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பிற அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தகவல் தெரிவித்து வாக்காளர்கள் சேர்க்கும் முகாமில் அதிகப்படியான வாக்காளர்களை சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் திருப்பனங்காடு துரை, செய்யாறு ஒன்றிய செயலாளர்கள்எம்.மகேந்திரன், அருகாவூர் அரங்கநாதன், எஸ்.திருமூலன், வே.குணசீலன், நாகப்பன், சி.துரை, வந்தவாசி நகர செயலாளர் ஓட்டல் பாஷா, ஒன்றிய செயலாளர்கள் டி.வி.பச்சையப்பன், டாக்டர் லோகேஷ்வரன், தங்கராஜ், முனுசாமி, செல்வராஜ், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் பூக்கடை கோபால், நகர அவைத்தலைவர் ஜனார்த்தனன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.