சிறப்பு செய்திகள்

எடப்பாடியாரிடம், மு.தம்பிதுரை எம்.பி. வாழ்த்து

சென்னை

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளிக்கும் திட்டங்களை செயல்படுத்து குறித்து கண்காணிக்கும் குழுவின் தலைவராக கழக மாநிலங்களவை உறுப்பினர் மு.தம்பிதுரை நியமிக்கப்பட்டதை அடுத்து கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து நேற்று வாழ்த்து பெற்றார்.

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியை கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.தம்பிதுரை நேற்று சந்தித்தார்.

அப்பொழுது நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கண்காணிக்கும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு கழக மாநிலங்களவை உறுப்பினர் மு.தம்பிதுரை கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு கொண்டு வருவதாக உறுதியளிக்கும் திட்டங்களை கண்காணிக்கும் குழுவின் தலைவராக கழக உறுப்பினர் நியமிக்கப்பட்டு இருப்பது கழகத்திற்கு கிடைத்த பெருமை. இதன்
மூலம் தமிழகத்துக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த மாநிலங்களுக்கும் வரவேண்டிய திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.