காஞ்சிபுரம்

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழக்கும்-முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் திட்டவட்டம்

காஞ்சிபுரம்

விடியா அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழக்கும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் திட்டவட்டமாக கூறி உள்ளார்

கழகத்தின் பொன்விழா நிறைவு மற்றும் 51ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் நாராயண பாளையம் தெரு பகுதியில்பகுதி கழக செயலாளர் கோல்டு ரவி ஏற்பாட்டில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஏழை எளிய மக்கள் பயன்பெற இலவச மின்சாரம் திட்டம் கொண்டு வந்தார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அனைத்து வீடுகளிலும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்து அதை செயல்படுத்தினார். 100 யூனிட் இலவச மின்சாரம் பெற்றவர்கள் இப்போது தி.மு.க. ஆட்சியில் மின்சார கட்டணம் கட்ட வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் மின்சார கட்டணம் 150 சதவீதம் உயர்ந்துள்ளது. இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மீண்டும் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமைய வேண்டும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

நேற்றைய தினம் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஒரு கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது . அதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 26 இடங்களையும் திமுக 14 இடங்களையும் வெற்றிபெறும் என கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் தேர்தலுக்குள் திமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் கூட வாங்க முடியாது. காரணம் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய பொருட்களான பால் விலை லிட்டருக்கு 12 ரூபாய் வரை உயர்த்தியது, டீசல் பெட்ரோல் விலையை குறைப்பேன் என வாக்குறுதி அளித்து இதுவரை குறைக்காமல் மக்களை பொருளாதார நெருக்கடியில் தள்ளியது, மக்கள் பணத்தை ஏமாற்றிய நிதி நிறுவனங்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அதற்கு மாறாக அவர்களுக்கு துணையாக செயல்பட்டு வரும் விடியா திமுக அரசுக்கு பாடம் புகட்ட பொதுமக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் கூறியது போல தற்போது தமிழகத்தில் பொம்மை முதலமைச்சர் தான் ஆட்சி செய்து வருகிறார். இதற்கெல்லாம் ஒரு விடிவு கிடைக்க வேண்டுமென்றால் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அமோக வெற்றிபெற செய்ய வேண்டுமென இங்கே கூடியிருக்கும் பொது மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் பேசினார்.