தற்போதைய செய்திகள்

வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் ரூ.4.63 கோடி மதிப்பில் சாலை பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தொடங்கி வைத்தார்

கிருஷ்ணகிரி

வேப்பனஹள்ளி தொகுதியில் ரூ.4.63 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணிகளுக்கு கழக துணைப்பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளகிரி ஒன்றியத்தின் அத்திமுகம்,
ஏ.செட்டிபள்ளி, அங்கொண்டபள்ளி, பண்ணபள்ளி ஆகிய ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் அத்திமுகம் கிராமத்திலிருந்து நரசபுரம் கிராம வழியாக பலவனபள்ளி,

ஆலசாதனபள்ளி, எட்டிபள்ளி குட்டா கிராமங்களுக்கு செல்லும் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலையை மேம்படுத்த பிரதமரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.63 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்படுத்துதல் பணிகளை கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சரும், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கிருஷ்ணகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.அசோக்குமார் ஆகியோர் பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.

இந்த விழாவில் சூளகிரி மேற்கு ஒன்றிய கழக செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான பாபு என்ற வெங்கடாச்சலம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் எஸ்.வி.எஸ்.மாதேஷ், மாவட்ட கழக துணை செயலாளரும், சூளகிரி ஊராட்சி மன்ற தலைவருமான கலைச்செல்வி ராமன், சைலேஷ் கிருஷ்ணன், வேப்பணபள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ், அத்திமுகம் ஊராட்சி தலைவர் நாராயணப்பா, சூளகிரி மேற்கு ஒன்றிய பொருளாளர், சூளகிரி மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் முனிச்சந்திரப்பா, வெங்கடேஷ் பாபு, முன்னாள் தலைவர். ஏ செட்டிபள்ளி நாராயணசாமி, கழக நிர்வாகிகள் சுரேஷ், நாகேஷ், மாவட்ட பிரதிநிதிகள் ஆனந்த், முணியேகவுடா, கழக பிரமுகர்,
சதாசிவம், கிளை செயலாளர்கள் சீனிவாசன், ஏ.செட்டி பள்ளி கிருஷ்ணப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.