மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே அறுந்து கிடந்த கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி விவசாயக்கூலி தொழிலாளி பலியானார். மின் வாரியத்தின் அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டி உறவினர்கள், சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த இளையாங்கன்னி கிராமத்தை சேர்ந்தவர் செபஸ்டின் (வயது 58), இவர் விவசாயக்கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை அருகிலுள்ள கிராமமான தொண்டமானூர் கிராமத்தில் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது கரும்பு தோட்டத்தின் நடுவே இருந்த மின் காப்பத்திலிருந்து கம்பி ஒன்று மூன்று மாதத்திற்கு முன்பாக அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதனை கவனிக்காத கூலி தொழிலாளி செபஸ்டின் கரும்புகளை வெட்டும் போது மின்சாரம் தாக்கி நிலத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மூன்று மாதத்திற்கு முன்பே அறந்த கிடந்த மின் கம்பியை சரி செய்யாத மின்வாரியத்தை கண்டித்தும் நிலத்தின் உரிமையாளரை கண்டித்தும் உயிரிழந்தவரின் சடலத்துடன் திருவண்ணாமலை – கள்ளக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மூன்று மாதத்திற்கு முன்பாக அருந்த மின் கம்பியை சரி செய்யாத மின்சார வாரியமே விவசாய
கூலித்தொழிலாளி உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க ணே்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்தனர் இதையடுத்து போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சு வார்தை நடத்தி பொதுமக்களை கலைந்து போக செய்தனர்.