தற்போதைய செய்திகள்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்,

முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்ட சுங்கசாவடி பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட கழகம் சார்பில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ப.மோகன், கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பணியாளர்கள் ஆதரவாக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சி மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடியில் 13 ஆண்டு காலமாக பணி செய்து வந்த 56 பணியாளர்கள் திடீரென முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் 58 நாட்களாக பல்வேறு கட்டங்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

மீண்டும் பணி வழங்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட பிடிப்பு தொகையை வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து சுங்கச்சாவடியில் பாஸ்ட் ட்ராக் முறையில் தொடர்ந்து வாகனங்களுக்கு பணம் வசூல் செய்யும் முறை நடைபெற்று வருகிறது. இதனால் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கழகச் செயலாளர் இரா.குமரகுரு தலைமையில் நடைபெற்றது.

இதில் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நீக்கப்பட்ட ஊழியர்களை உடனடியாக பணியமர்த்த கோரி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ப.மோகன், கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு,

மாவட்ட கழக நிர்வாகிகள் பச்சையாப்பிள்ளை, ஞானவேல்,சீனிவாசன், அய்யாகண்ணு, கிருஷ்ணமூர்த்தி, பாக்கியராஜ் ,ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ்,ராஜசேகர், தேவேந்திரன், அரசு, கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், அய்யம்பெருமாள், செண்பகவேல், சந்திரன், பழனி ராமலிங்கம், ஏகாம்பரம், பழனிச்சாமி, சந்தோஷ், சேகர், இளங்கோவன், நகர செயலாளர்கள் துரை, சுப்பு உள்ளிட்ட மண்டல, மாவட்ட, நகர , ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் குமரகுரு பேசுகையில், கழக ஆட்சியில் தான் சுங்கச்சாவடிகள் நிறுவப்பட்டு அதில் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். பணியாளர்கள் கடும் பணிச்சுமையில் கட்டணங்களை வசூல் செய்து மிகவும் சிரமப்பட்டார்கள்.

பொதுமக்களுக்கும், பணியாளர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் கழகம் தான். மற்ற கட்சிகள் யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள். இந்த பணியாளர்களுக்கு முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினால் அவர்கள் குடும்பம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதற்கு ஆளுங்கட்சி தி.மு.க.வும், மாவட்ட நிர்வாகKம் இணைந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.