சிறப்பு செய்திகள்

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

திருவண்ணாமலை

ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் மக்கள். எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக அரியணையில் அமர்த்துவோம் என்று கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் சூளுரைத்து உள்ளார்.

கழகத்தின் 51ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தின் 58ம் ஆண்டு தொடக்க விழா திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றியகழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் பேசியதாவது:-

எடப்பாடியார் கழகத்தின் பொதுச்செயலாளராக வேண்டியும், மீண்டும் முதலமைச்சராக வேண்டியும் ஆன்மீக பயணம் செய்து இறைவா மீண்டும் எடப்பாடியாரை முதலமைச்சராக வர வேண்டி தமிழ்நாட்டில் உள்ள 44 மாவட்டங்களில் உள்ள தர்காக்களிலும் சிறப்பு பிரார்த்தனை செய்து வருகிறேன்.

கழகத்தினர் அனைத்து மாவட்டங்களிலும் எழுச்சியோடு இருக்கின்றார்கள். இஸ்லாமியர்கள் நீங்கள் நினைப்பது போல் அல்ல. பிஜேபி கூட்டணியில் இருப்பதால் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஓட்டு போடவில்லை என்று நினைக்க வேண்டாம். இன்று இருக்கின்ற நிலைமை வேறு. இந்த ஸ்டாலின் ஆட்சியை என்றைக்கு வீட்டுக்கு அனுப்பலாம்.

இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற முடிவோடு இருக்கின்ற இஸ்லாமிய நண்பர்கள் எல்லோரும் என்னுடன் சிறப்பு பிரார்த்தனைக்கு வருகிறார்கள்.

இறைவனை வேண்டுகிறார்கள். தொண்டர்களே நீங்கள் இருக்கும்போது நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும். சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று மீண்டும் முதலமைச்சராக எடப்பாடியார் அரியணையில் அமர்வார். எனவே நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் நீங்கள் சிறப்பாக பணியாற்றி எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க சூளுரை ஏற்போம்.

இவ்வாறு கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேசினார்.