தற்போதைய செய்திகள்

காஞ்சிபுரம் பென்னேரிக்கரையில் வீடுகள் இடித்து தரைமட்டம்-எதிர்ப்பு தெரிவித்து மறியல்: 100-க்கும் மேற்பட்டோர் கைது

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை ஏரி கரையையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பென்னேரிக்கரையை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 9-ம்தேதியன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து அந்த பகுதிகள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கிடவும், வீடுகளை இடித்து அகற்றும் நடவடிக்கை கை விடவும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியானது அன்று கைவிடப்பட்டது.

இதனையெடுத்து ஏகாம்பரநாதர் கோவில் மாடவீதி பகுதியிலுள்ற 82 வீடுகள் அகற்றப்படவுள்ளதாக பொதுப்பணி துறையினர் தெரிவித்திருந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக தூக்கிச்சென்று அவர்களை பேருந்தில் ஏற்ற முற்பட்டனர்.

அப்போது போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்குமிடையே கடும் வாக்குவாதமானது ஏற்பட்டு தள்ளுமுள்ளு சம்பவங்களும் நடந்தன. பின்னர் அவர்கள் வலுகட்டாயமாக கைது செய்யப்பட்டு 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பாலுள்ள ஓர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் அப்பகுதியில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சாமுண்டீஸ்வரி என்னும் பெண்மணி ஒருவரை வலுகட்டாயமாக போலீசார் தூக்க முயன்ற போது மயக்கமுற்றார். இதனையெடுத்து அவர் அவசர ஊர்த்தி மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டு சகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இதில் நந்தினி என்கிற 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனையெடுத்து அதனை தடுத்தி நிறுத்திய காவல்துறையினர், தண்ணீரை ஊற்றி அவரை கைது செய்து பேருந்தில் அழைத்து சென்றனர்.

இதனையெடுத்து ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகளிலிருந்த பொருட்கள் பணியாளர்களை கொண்டு அப்புறப்படுத்தப்பட்டு ஜேசிபி இயந்திரம் மூலம் வீடுகள் இடிக்கும் பணியானது துவங்கப்பட்ட நிலையில் அவ்வீடுகளின் உரிமையாளர் தன் உழைப்பால் கட்டப்பட்ட வீடுகள் கண்முன்னே இடிக்கப்படுவதை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் அங்குள்ள குழந்தை குட்டிகளும் பெற்றோர்களுடன் சேர்ந்து தேம்பி தேம்பி அழுத காட்சி அனைவரின் மனதையும் உருகுலைய செய்தது. இதில் அங்கிருந்த சிலர் நீர்நிலை ஆக்கிரமிப்பு என 80 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் எங்களை வெளியேற்றி நடவடிக்கை எடுக்கிறீர்கள் சரி ஆனால் இவை நீர்நிலை என தெரிந்தும் எங்களிடம் வரி வசூல் செய்தது ஏன், மின் இணைப்பு வழங்கியது ஏன், இந்த இடத்தில் தான் வசிக்கிறோம் என ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கியது ஏன் எனவும் கேள்விகளை எழுப்பினர்.

எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எங்களுக்கு துரோகம் இழைப்பது எனவும் அழுதபடியே ஆவேசமாக கேள்விகளை அதிகாரிகள் முன்னிலையில் எழுப்பினர். எவ்வித மாற்று இடங்களும் வழங்கிடாமல் வீடுகள் இடிக்கப்பட்டு பல்வேறு குடும்பங்கள் செய்வதறியாது நிர்க்கதியாய் வீதியில் நிற்கும் நிலையை கண்டு பார்போர்களும் கண்ணீர் வடிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. மாற்று இடம் வழங்காமல் எங்கள் வீடுகளை இடித்து அப்புறப்படுத்தி இந்த விடியா தி.மு.க. அரசு நீடிக்காது. விரைவில் கலைந்து விடும் என்று பொதுமக்கள கண்ணீரோடு சாபமிட்டனர்.