தற்போதைய செய்திகள்

மக்கள் நலனில் அக்கறையற்றவர்களை வெற்றிபெற வைத்து விட்டோமே

வாக்களித்தவர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்

சென்னை

சென்னை மாநகராட்சி 15-வது மண்டலத்தில் நடைபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தி.மு.க.வைச்சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்காததால் மக்கள் நலனில் அக்கறையின்றி இருப்பதை வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்ததோடு இதற்காகத்தான் இவர்களை நாங்கள் வெற்றி பெற வைத்தோமா? என்று வேதனையோடு கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னை மாநகராட்சி 15-வது மண்டலத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சோழிங்கநல்லூரில் நடைபெற்றது. மொத்தம் 9 மாமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 15-வது மண்டலத்தில் கழகத்தைச் சேர்ந்த 193-வது வார்டு மாமன்ற உறுப்பினர் டி.சி.கோவிந்தசாமி, 196-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஷ்வினி கருணா, 197-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மேனகா சங்கர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த மண்டலக்குழு தலைவர் மதியழகனை தவிர தி.மு.க.வை சேர்ந்த எவரும் பங்கேற்கவில்லை. இதனால் மண்டலக்குழு தலைவர் மற்றும் கழக மாமன்ற உறுப்பினர்கள் 3 பேருடன் கூட்டம் நடைபெற்றது.

தி.மு.க.வை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்காததால் மக்கள் நலனில் அக்கறையில்லாதததை இது வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்ததோடு இதற்காகத்தான் இவர்களை நாங்கள் வெற்றி பெற வைத்தோமா? என்று வேதனையோடு கேள்வி எழுப்பியுள்ளனர்.

பின்னர் கழக மாமன்ற உறுப்பினர்கள் கூறுகையில், கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆசியுடன், சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் வழிகாட்டுதலின்படி மாமன்ற கூட்டத்தில் பங்கேற்று, வார்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதையே குறிக்கோளாக கொண்டு மக்கள் நலப்பணிகளை ஆற்றி வருகிறோம்” என்றனர்.