தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு விளக்கம் அளிப்பாரா, மவுனத்தை கலைப்பாரா ஸ்டாலின்?சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை,
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் விவசாயிகளுக்கு உரிய விளக்கம் அளிப்பாரா, மவுன விரதத்தை ஸ்டாலின் கலைப்பாரா என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.


58 கால்வாயில் தண்ணீரை திறக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
இதன்பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-


கழக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் ஆணைக்கிணங்க 58 கால்வாயில் தண்ணீரை திறக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். வைகை அணையில் 70.44 அடி தண்ணீர் உள்ளது, வைகை அணையில் 67 அடி இருந்தாலே போதும், 58ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் விவசாயிகள் நலனை புறக்கணிக்கிற அரசாக, விவசாயிகள் வேதனையை கவனத்தில் கொள்ளாத அரசாக திமுக அரசு இருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகள் பிரச்சினையை கவனத்தில் கொள்வார் என்ற நம்பிக்கையோடு இதை தெரிவிக்கிறோம்.


இந்த 58 கால்வாயின் மூலம் 110 கிராம மக்களின் ஆதரமாகவும், 2500 ஏக்கர் விவசாய நிலம் பலன் பெறும் வகையிலும், ஒரு லட்சம் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது. 58ம் கால்வாய் திட்டத்திற்கு 11 நாட்களுக்கு 316 கன அடி நீர் திறந்தாலே அப்பகுதியிலுள்ள 35 கண்மாய்கள் நிறைந்து விடும். கடந்த எடப்பாடியார் ஆட்சி காலத்தில் 65 லட்சத்தில் மராமத்து பணி செய்யப்பட்டு, மூன்று முறை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தவே வந்தோம்.

மாவட்ட ஆட்சியர் கனிவோடு கோரிக்கையை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்து மனுவை தந்துள்ளோம். 58 கால்வாயில் தண்ணீர் திறக்கவில்லை என்றால் முதல்வர் செவி சாய்க்கவில்லை என்றால் எடப்பாடியார் கவனத்திற்கு கொண்டு சென்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.


முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக தேக்கி கொள்ளலாம், பேபி அணையை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக தேக்கி கொள்ளலாம் என்ற வரலாற்று தீர்ப்பை அம்மா பெற்று தந்தார்கள், அதற்காக ஐந்து மாவட்ட விவசாயிகள் சார்பாக அம்மாவிற்கு மாபெரும் பாராட்டு விழா நடைபெற்றது. விவசாயிகள் விழா எடுத்த அம்மா திடலை தற்போது கலைஞர் அரங்கமாக மாற்றி விட்டார்கள்.
ரூல்கர்வ் என்ற அடிப்படையில் கேரள அரசு தன்னிச்சையாக தண்ணீரை திறந்து கொள்கிறார்கள். சர்வாதிகார போக்குடன் செயல்படுகின்றனர்.

விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கால் வைக்க முடியும,. 142 அடியாக தேக்கினால் மட்டுமே இரண்டரை லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற முடியும். அம்மாவின் ஆட்சிக்முறை 142 அடியாக நீர் தேக்கப்பட்டது.ரூல்கர்வ் திட்டத்தின் மூலம் செப்டம்பர் 11 முதல் 20 வரை 142 அடியாக தேக்க வேண்டும். தற்போது முல்லை பெரியாறில் 137.95 அடியாக உள்ளது. ஆகவே முல்லைப்பெரியாறில் நீர்மட்டத்தை 142 அடியாக தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவமழை பெய்த போதும் நீரை தேக்க முடியவில்லை. தற்போது ரூல்கர்வ் திட்டத்தின் மூலம் தேக்க முடியவில்லை. மதுரைக்கு அண்ணா பிறந்தநாள் விழாவிற்கு வருகை தரும் முதலமைச்சர் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் விவசாயிகளுக்கு உரிய விளக்கம் அளிப்பாரா, மவுன விரதத்தை கலைப்பாரா?
இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.