தற்போதைய செய்திகள்

இனிவரும் தேர்தலில் தி.மு.க அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்- முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் திட்டவட்டம்

காஞ்சிபுரம்

பல பொய்களை கூறி ஆட்சிக்கு வந்துள்ளார் ஸ்டாலின். இனிவரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கூறி உள்ளார்.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், மின்கட்டணத்தை உயர்த்திய விடியா திமுக அரசை கண்டித்து நாளை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

விடியா தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து பேருந்து கட்டணம், மின்சார கட்டணம், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பெருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கக்கூடிய ஒரே இயக்கம் கழகம் தான். 1.5 கோடி தொண்டர்களின் எண்ணம் ஒற்றை தலைமையே இதை ஏற்க மனமில்லாமல் கழகத்தை அழிக்க நினைப்பவர்கள் தானாக அழிந்து போவார்கள்.

சட்டசபையில் திமுக ஆட்சியையும், கருணாநிதியின் புகழையும் பாடியவர்களை கழக தொண்டர்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள், மக்கள் விரோத திமுக ஆட்சியில் நடைபெறும் ஊழலையும், ஸ்டாலினையும் எதிர்க்க கூடியவர் எடப்பாடியார் மட்டுமே. புரட்சித்தலைவி அம்மா வழியில் தொண்டர்களையும் கழகத்தையும் கட்டிக்காக்கக்கூடிய ஒரே தலைவராக எடப்பாடியார் விளங்குகிறார்.

கழகத்தை கைப்பற்ற ஓபிஎஸ் எத்தனை முறை வழக்கு தொடுத்தாலும் எத்தனை நீதிமன்றம் சென்றாலும் இனி தொடர்ந்து படுதோல்வியை தான் சந்திப்பார். காஞ்சிபுரத்தில் ஏழை, எளிய நடுத்தர மக்கள் தனியார் நிதி நிறுவனங்களில் பணத்தை போட்டுவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு விடியா திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேபோல் ஏகாம்பரநாதர் வடக்கு மாட வீதியில் நீர்நிலை ஆக்கிரமிப்ஙபில் உள்ளதாக கூறி 60 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்த 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இடித்து தள்ளிய மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், மின்சார கட்டணத்தை உயர்த்தி மக்களை அவதிக்குள்ளாக்கிய விடியா அரசை கண்டித்தும் நாளை நடைபெற உள்ள மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு கழகத்தினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

தி.மு.க ஆட்சியில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும். ஸ்டாலின் பல பொய்களை கூறி ஆட்சிக்கு வந்துள்ளார். அவரது உண்மையான முகம் மக்களுக்கு தெரிந்து விட்டது. புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியிலும் எடப்பாடியார் ஆட்சியிலும் பொதுமக்கள் பாதிப்படையாத வகையில் முடிவு எடுப்பார்கள். ஆனால் இந்த விடியா ஆட்சியில் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் இனிவரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் பேசினார்.