பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு எடப்பாடியார் மலர்தூவி மரியாதை

சென்னை
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி கழகத்தின் சார்பில், அவரது திருஉருவச்சிலைக்கு
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 114-வது பிறந்த நாளான நேற்று காலை, சென்னை அண்ணாசாலையில் உள்ள
பேரறிஞர் அண்ணாவின் திருஉருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவ படத்திற்கு, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து, கழக அவைத்தலைவரும், தமிழ்நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர் அ.தமிழ்மகன் உசேன், கழக துணை பொதுச்செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ, நத்தம் இரா.விசுவநாதன் எம்.எல்.ஏ, கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.எல்.ஏ, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ, கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ,
கழக அமைப்பு செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான டி.ஜெயக்குமார், செ.செம்மலை, என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ, ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ, எஸ்.கோகுலஇந்திரா, கரூர் எம்.சின்னசாமி, டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ, பா.பென்ஜமின், கழக விவசாய பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உடுமலை
கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ,
கழக மருத்துவ அணி செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால், கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ, கழக அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், கழக அமைப்பு செயலாளர் சுதா கே.பரமசிவன், கழக மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், கழக அமைப்பு செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான ப.மோகன், முக்கூர் என்.சுப்பிரமணியன், செஞ்சி ந.ராமச்சந்திரன், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன்,
கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் கா.சங்கரதாஸ் உள்ளிட்ட தலைமை கழக செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின், மாவட்ட கழக செயலாளர்களும், மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம்,
வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப்பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்வாறு தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.