கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன் பரத்துக்கு ஒருங்கிணைப்பாளர் வாழ்த்து

சென்னை
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன் பரத் சுப்ரமணியனுக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இத்தாலியில் நடைபெற்ற செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த 14-வயது சிறுவன் பரத் சுப்ரமணியன் அதிக புள்ளிகள் பெற்று கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறுவன் பரத் சுப்ரமணியனுக்கு
எனது பாராட்டுக்கள். அவர் மேலும் பல சாதனைகள் புரிந்திட வாழ்த்துகள்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.