விடியா தி.மு.க அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்- பொள்ளாச்சி வி.ஜெயராமன் உறுதி

திருப்பூர்,
தி.மு.க. அரசுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்று கழக தேர்தல் பிரிவு செயலாளரும், மாவட்ட கழக செயலாளரும், சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ பேசினார்.
மின்கட்டணத்தை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து திருப்பூர் மாநகர் மாவட்ட கழக அலுவலகமான அம்மா மாளிகையில் கழக தேர்தல் பிரிவு செயலாளரும், மாவட்ட கழக செயலாளரும், சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கழக தேர்தல் பிரிவு செயலாளரும், மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ பேசியதாவது:-
இலங்கை அதிபர் ராஜபக்சே போல் திமுக தலைவர் ஸ்டாலினும் இரவோடு இரவாக குடும்பத்தோடு தப்பி ஓடக்கூடிய காலம் வரும். கொரோனா ஊரடங்குக்கு பிறகு மக்கள் மீண்டு வரக்கூடிய சூழ்நிலையில் வீட்டு வரி, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றை தி.மு.க. அரசு உயர்த்தி உள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
திமுக அரசுக்கு எதிராக ஒரு மாதம் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி கையெழுத்து இயக்கம் நடத்தி அதை ஆளுநருக்கு அனுப்பி ஸ்டாலினுக்கு சரியான பாடம் புகட்டுவோம். திருப்பூரில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களை திரளாக பங்கேற்க செய்ய வேண்டும். தமிழகமே திரும்பிப்பார்க்கும் அளவுக்கு திருப்பூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒன்றிணைந்து நடத்திட வேண்டும்.
இவ்வாறு கழக தேர்தல் பிரிவு செயலாளரும், மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ பேசினார்.
இதன்பின்னர் பல்லாயிரக்கணக்கானோரை திரட்டி விடியா தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது