அள்ளி அள்ளி கொடுத்து சிவந்த கரத்துக்கு சொந்தக்காரர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம்

சென்னை,
அள்ளி அள்ளி கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது. அள்ளி அள்ளி கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்,
கடைநிலை தொழிலாளியையும் மதிக்கும் பண்பாளர், சரித்திர திட்டங்களால் தமிழகத்தின் தாயுமானவராய் வாழ்ந்து, கோடிக்கணக்கான இதயங்களில் அழியாப் புகழுடன் இதயதெய்வமாக வீற்றிருக்கும் எங்கள் புரட்சித்தலைவர் 105-வது
பிறந்தநாள் புகழ் வணக்கங்கள்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.