நேதாஜியின் தியாகம் துணிச்சல் அனைவர் மனதிலும் நீங்காமல் நிறைந்திருக்கும் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கம்

சென்னை
வங்கத்து சிங்கம் நேதாஜியின் தியாகம், துணிச்சல் அனைவர் மனதிலும் நீங்காமல் நிறைந்திருக்கும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தேசிய ராணுவத்தை உருவாக்கி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடிய விடுதலை வீரர் “வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளாகிய தேசிய வல்லமை தினத்தில்” அவரது தியாகங்களை நினைவுகூர்ந்து வணங்குவோம். அவரது தியாகம், துணிச்சல் அனைவர் மனதிலும் நீங்காமல் நிறைந்திருக்கும்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.