தமிழகம்

வீரத்தின் அடையாளம் மாபெரும் வீரர் நேதாஜி- எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம்

சென்னை

வீரத்தின் அடையாளமாய் திகழ்ந்த மாபெரும் வீரர் நேதாஜி என்று எதிர்க்க்டசி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாட்டின் துடிப்பான இளைஞர்களை ஒன்று திரட்டியதுடன், இந்திய ராணுவத்தை உருவாக்கி எதிரிகளை திணறடித்து வீரத்தின் அடையாளமாய் விளங்கிய மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளில் அவரின் வீரத்தை போற்றி வணங்குகிறேன்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.