தற்போதைய செய்திகள் மற்றவை

எடப்பாடியார் பங்கேற்கும் பொதுக்கூட்ட ஏற்பாடு -சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் ஆலோசனை

சேலம்

சேலம் புறநகர் மாவட்டம், வீரபாண்டி தொகுதி, ஆட்டையாம்பட்டியில் வருகிற 22-ம்தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு பேருரையாற்றுகிறார்.

இந்த கூட்ட ஏற்பாடுகள் குறித்து வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட பனமரத்துப்பட்டி, மல்லூர், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை ஆகிய பேரூராட்சிகளில் சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன் ஒவ்வொரு பேரூராட்சிக்கும் நேரடியாக சென்று கழக நிர்வாகிகளுடன் கூட்டத்திற்கு தலைமை தாங்கி ஆலோசனை நடத்தினார். வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ராஜமுத்து முன்னிலை வகித்தார்.

இதில் சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

ஆட்டையாம்பட்டியில் வரும் 22-ம்தேதி நடைபெறும் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடியார் பங்கேற்று பேருரையாற்றவுள்ளார். அவரை வரவேற்கும் வகையிலும் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தும் வகையிலும், நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் கழக தொண்டர்களையும், பொதுமக்களையும் வார்டு வாரியாக திரட்டி வரவேண்டும். மக்கள் நலனுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த விடியா தி.மு.க. ஆட்சியின் அவலங்களை மக்கள் உணரும் வகையில் அனைத்து கழக நிர்வாகிகளும் ஒன்றிணைந்து மக்களை திரட்ட வேண்டும்.

கிளை முதல் ஊராட்சி, பேரூர், ஒன்றியம் என அனைத்து மட்டத்திலும் பொது மக்களை திரட்டி அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பங்கு பெற செய்ய வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் கூட்டம் துவங்கியது முதல் முடியும் வரை முழுமையாக பொதுமக்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் எடப்பாடியார் பங்கு பெரும் பொதுக்கூட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்களை திரட்ட வேண்டும், இதில் கழக நிர்வாகிகள் முழுமையான ஈடுபாட்டோடு சிறப்பாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் சேலம் புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் தமிழ்மணி, ஒன்றிய கழக செயலாளர்கள் வருதராஜ், ஜெகநாதன், பாலச்சந்திரன், வெங்கடேஷ், மெடிக்கல் ராஜசேகரன், பேரூர் கழக செயலாளர்கள் சின்னத்தம்பி (எ) காளியண்ணன், கண்மணி (எ) வெங்கடாசலம், மாதேஸ்வரன், துளசிராஜன், புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.